பாலஸ்தாபனம் என்றால் என்ன? விளக்குகிறார் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா..
ஆலயத்தில் திருப்பணி, புனரமைப்பு, மகா கும்பாபிஷேகம் அல்லது வேறு காரணங்களுக்காக மூலவர் திருமேனியில் நேரடியாக நித்திய பூஜைகளை மேற்கொள்ள இயலாத சூழலில், மூலவரின் தெய்வீக சக்தியை ஆகம முறையின்படி தற்காலிகமாக ஒரு கலசம், யந்திரம் அல்லது வேறு புனித ஸ்தானத்தில் எழுந்தருளச் செய்து வழிபடுவதே பாலஸ்தாபனம் எனப்படுகிறது. பொதுவாக ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்து 12 வருடங்கள் சென்றால் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகம விதி. அதற்கு முன்பதாக செய்யப்படுகின்ற ஒரு ஆகம செயற்பாடு தான் […]









