goat herding | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

முகமாலையில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு..!

  • Apr 15, 2026 - 04:15 PM
  • 0 Comments

பளை பொலிஸார் விசாரணை கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று (15.04.2026) ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த விபரங்கள்: முகமாலை, பொந்தர் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை வழமை போல ஆடு மேய்ப்பதற்காகச் சென்ற முதியவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. அடையாளம் காணப்பட்டவர்: […]

power tariff hike | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் மின் தடை குறித்த அறிவிப்பு..!

  • Apr 9, 2026 - 09:58 AM
  • 0 Comments

நாட்டின் சில பகுதிகளில் நேற்று (08.04.2026) மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயர் அழுத்த மின் தடம் ஒன்று அறுந்து விழுந்ததன் காரணமாக கட்டுபொத்த, நாரம்மல, சியம்பலாகஸ்கொடுவ, கிரிஉல்ல, அலவ்வ மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் நேற்று இரவு முதல் திருத்தப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், இன்று அதிகாலைக்குள் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, ‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ […]

kottaimunai club | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பிலிக்ஸ் வெற்றிக் கிண்ணம்..!

  • Apr 8, 2026 - 02:23 PM
  • 0 Comments

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் இரண்டாவது பிலிக்ஸ் கடினப்பத்து வெற்றிக் கிண்ண நிகழ்விற்கான ஊடக சந்திப்பு கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் உள்ளக மண்டபத்தில் நேற்று (07.04.2026) இடம் பெற்றது. மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும் கழகத்தின் வளர்ச்சிக்கு அயராது சேவையாற்றிய தவராசா பிலிக்ஸ் அவர்களின் நினைவாக கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினால் பிலிக்ஸ் சவால் கிண்ணத்திற்கான (Felix challnge trophy 2nd Season) ஊடக சந்திப்பு இடம் பெற்றது. பிலிக்ஸ் […]

e0aeaee0aeb0e0af81e0aea4e0aebee0aea9e0af88 e0aeaae0af8ae0aeb2e0aebfe0aeb8e0af8d e0aea8e0aebfe0aeb2e0af88e0aeafe0aea4e0af8de0aea4e0aebf | Pathivu News செய்திகள்

மருதானை பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபரான பெண்ணொருவர் தற்கொலை!

  • Jan 22, 2025 - 08:56 PM
  • 0 Comments

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் இந்தச் சம்பவம் இன்று (22) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

e0aea8e0af80e0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0ae87e0aeb3e0ae9ee0af8de0ae9ae0af86e0aeb4e0aebfe0aeafe0aea9e0af88 e0ae85e0aea8e0af81e0aeb0 | Pathivu News செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனை அநுர அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது- தீவக சிவில் சமூகம்

  • Jan 22, 2025 - 08:50 PM
  • 0 Comments

மேன்முறையீட்டு நீதிபதிக்கான பதவி உயர்விற்கு அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அதில் கவனம் செலுத்தாது நீதிபதி இளஞ்செழியனுக்கு அநுர அரசு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாடியுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது’ இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் […]

e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0ae9ae0af86e0aeafe0aeb2e0ae95 e0ae89e0aea4e0af8d | Pathivu News செய்திகள்

வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் கைது அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில்

  • Jan 21, 2025 - 04:18 PM
  • 0 Comments

அரச காணிக்கான போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் […]

e0ae89e0aeb2e0ae95e0aebfe0aea9e0af8d e0ae9ae0ae95e0af8de0aea4e0aebf e0aeb5e0aebee0aeafe0af8de0aea8e0af8de0aea4 e0ae95e0ae9fe0aeb5 | Pathivu News உலகம் வினோத உலகம்

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா? தெரியாவிட்டால் வாசியுங்கள்

  • Jan 19, 2025 - 10:21 PM
  • 0 Comments

எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களின் புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.. 1.சிங்கப்பூர் – 195 நாடுகளுக்கு விசா தேவையில்லை. 2. ஜப்பான் – 193 நாடுகளுக்கு விசா தேவையில்லை. 3. பின்லாந்து,பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின்- 192 நாடுகளுக்கு விசா தேவையில்லை . 4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவீடன், நார்வே- 191 நாடுகளுக்கு விசா தேவையில்லை. […]

e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0aebfe0aeb2e0af8d e0ae95e0ae9ae0aebfe0aeaae0af8de0aeaae0af81 e0ae89 | Pathivu News செய்திகள்

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து குற்றவாளிகளை தப்பவிட்ட பொலிஸார்

  • Jan 18, 2025 - 03:33 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (17) பொலிஸார் சுற்றிவளைத்தனர் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டது இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பியோடினர் சந்தேக நபர்களை கலைத்து பிடிக்க முடியாத பொலிஸார் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 14 பெரல் கோடாவை மடடுமே கைப்பற்றியுள்ளனர்.

e0ae85e0aeb0e0ae9a e0ae95e0aeb0e0af81e0aeae e0aeaee0af8ae0aeb4e0aebfe0ae95e0aeb3e0af8d e0ae86e0aea3e0af88e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News செய்திகள்

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் சிங்களவர் நியமனம்

  • Jan 6, 2025 - 03:48 PM
  • 0 Comments

ஜனாதிபதியால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா மற்றும் லரீனா அப்துல் ஹக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (06) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.  

e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aeb5e0aebfe0aeb0e0af8be0aea4e0aeaee0aebee0ae95 e0ae85e0ae95e0aeb4e0af8de0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae88e0ae9f | Pathivu News உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேகநபர்கள் கைது !

  • Jan 5, 2025 - 11:20 PM
  • 0 Comments

பழங்காலப் பொருட்களை திரட்டும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு மேற்கொண்ட 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அட்டுலுகம மற்றும் மீவலகந்த பகுதிகளில் நடைபெற்ற அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தந்த இடங்களில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. அதில், 25 முதல் 56 வயதிற்கு இடையிலான சீதுவ மற்றும் தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்தில், பூஜை பொருட்கள் மற்றும் அகழ்வு பணியில் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp