உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொக்கடிச்சோலை அம்பிளாந்துறை வீதி அபிவிருத்தித் திட்டப் பணிகள் ஆரம்பம்..!

  • May 22, 2026 - 11:40 AM
  • 0 Comments

மட்டக்களப்பு – கொக்கடிச்சோலை – அம்பிளாந்துறை வீதி அபிவிருத்திப் பணிகள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (21.05.2026) உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்துவைக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண நிதியத்தின் (EPC) கீழ் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கொக்கட்டிச்சோலை – அம்பிளாந்துறை வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது, மேலும் இந்த வீதியின் நீளம் 1500 மீட்டர் ஆகும். 15 மில்லியன் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கோதுமை மா விலை இன்று முதல் அதிகரிப்பாம்..!

  • Apr 29, 2026 - 01:40 PM
  • 0 Comments

கோதுமை மாவின் விலையை இன்று (29.04.2026) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பிற்கு அமைய, இதற்கு முன்னர் 220 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 225 ரூபாவாகும்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்…!

  • Apr 24, 2026 - 03:05 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (24.04.2026) காலை 9.30 மணியளவில் மாவிலித்துறை இறங்கு துறைமுகத்தில் இருந்து ஆரம்பமாகியது. நெடுந்தீவில் 1418 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு, 688 குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 730 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு வழங்கப்படாத நிலையில் சாராப்பிட்டி கிணற்று நீரையே குடிநீருக்காக நம்பி இருக்கின்றார்கள். ஆனால் அதிகளவான நீரை கடற்படையினரும் பயன்படுத்துவதால், தற்போது கிணற்று நீர் உவர் நீராக மாற்றமடைந்து வருகின்றது. போக்குவரத்து […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி மதுபான விற்பனை நிலையத்திற்குள் புகுந்தது..!

  • Apr 23, 2026 - 01:51 PM
  • 0 Comments

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள “தயா லிக்கர் ஷாப் ” (Thaya Liquor Shop) முன்பாக பயணித்த லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதுபான விற்பனை நிலையத்தின் முன்பகுதியை மோதித் தள்ளிய சம்பவம் இன்று (23.04.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. லொறி மோதிய வேகத்தில் விற்பனை நிலையத்தின் முன்பக்க வேலிகள், பாதுகாப்புத் தூண்கள் மற்றும் கட்டிடத்தின் முகப்புப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளன. அதிகாலை நேரம் என்பதால் வீதியில் நடமாட்டம் குறைவாக இருந்தமையால் பெரும் உயிர்ச்சேதம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும்..!

  • Apr 23, 2026 - 01:31 PM
  • 0 Comments

யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் தெரிவிப்பு நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலன் தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக,984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்று 22.04.2026 அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

‘தாழ் தள’ பஸ் சேவை மாகும்புரவில் ஆரம்பம்..!

  • Apr 21, 2026 - 04:38 PM
  • 0 Comments

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோரின் முன்னுரிமையைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘தாழ் தள’ பேருந்து சேவை இன்று (21) மாகும்புர பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், கண்பார்வை சவால்களைக் கொண்டோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் இலகுவாக ஏறிச் செல்லக்கூடிய வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட 10 பேருந்துகள் இன்று முதல் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

300 அடி பள்ளத்தில் பாய்ந்த மகிழுந்து – ஒருவர் பலி – மூவர் காயம்..!

  • Apr 17, 2026 - 03:23 PM
  • 0 Comments

பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவிற்குள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (17.04.2026) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். இந்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே ஆண் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மகிழுந்தின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் வீதியில் கிடந்த சடலம்..!

  • Apr 17, 2026 - 09:34 AM
  • 0 Comments

வவுனியா – கொறவப்பொத்தானை வீதியில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று நேற்று(16.04.2026) மீட்கப்பட்டது. குறித்த பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக நேற்று மதியம் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் நீண்ட நேரத்தின் பின்னரே பொலிசார் அந்தப்பகுதிக்கு வருகைதந்ததாக கூறப்படுகின்றது. அங்கு நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாநகரசபை உறுப்பினர் பொலிசாருடன் இணைந்து சடலத்தை அங்கிருந்து அகற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!

  • Apr 16, 2026 - 10:23 AM
  • 0 Comments

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்நகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நேற்று (15.04.2026) மாலை சுமார் 4.00 மணியளவில், கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அம்பல்நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை சோதனையிட்டதில் அவரிடமிருந்து ‘ஐஸ்’ (Crystal Meth) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள்: கைது செய்யப்பட்ட […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையால் மீட்கப்பட்ட ஈரானியக் கடற்படையினர் தாயகம் திரும்பினர்..!

  • Apr 15, 2026 - 04:20 PM
  • 0 Comments

இலங்கையால் மீட்கப்பட்ட இரண்டு போர்க்கப்பல்களில் இருந்த 200க்கும் மேற்பட்ட ஈரானியக் கடற்படையினர் தாயகம் திரும்பியுள்ளனர் என இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர ராய்ட்டர்ஸ் மற்றும் ஏஎஃப்பி செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்தார். மார்ச் 4 அன்று இந்தியப் பெருங்கடலில் இருந்தபோது, ​​ஐரிஸ் தேனா நீர்மூழ்கிக் கப்பல் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் தேனாவில் இருந்த 104 கடற்படையினர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த நேரத்தில், ஈரானியக் கப்பல்கள் இந்தியா ஏற்பாடு செய்திருந்த கடற்படைப் […]