யாழ் கடற்தொழிலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை பாதிக்கும்..!
யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்குதல் மேற்கொண்டு, இந்தியாவிற்கு கடத்தி சென்றமையானது, மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இலங்கை கடற்தொழிலாளர் ஒருவரை கடுமையாக தாக்கி , அவரை இந்தியாவிற்கு கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்து, வெளியிட்டுள்ள […]









