உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் கடற்தொழிலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை பாதிக்கும்..!

  • Apr 29, 2026 - 12:20 PM
  • 0 Comments

யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்குதல் மேற்கொண்டு, இந்தியாவிற்கு கடத்தி சென்றமையானது, மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இலங்கை கடற்தொழிலாளர் ஒருவரை கடுமையாக தாக்கி , அவரை இந்தியாவிற்கு கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்து, வெளியிட்டுள்ள […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் கடந்த பங்குனி மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு..!

  • Apr 24, 2026 - 10:46 AM
  • 0 Comments

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவிய போதிலும், கடந்த பங்குனி மாதத்தில் 1,467 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க நேற்று (23.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தத் விடயத்தைக் குறிப்பிட்டார். அதன்படி, பொருட்களின் ஏற்றுமதி மூலம் 1,180 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சேவை ஏற்றுமதி மூலம் 286 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளன. இதன் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி மதுபான விற்பனை நிலையத்திற்குள் புகுந்தது..!

  • Apr 23, 2026 - 01:51 PM
  • 0 Comments

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள “தயா லிக்கர் ஷாப் ” (Thaya Liquor Shop) முன்பாக பயணித்த லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதுபான விற்பனை நிலையத்தின் முன்பகுதியை மோதித் தள்ளிய சம்பவம் இன்று (23.04.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. லொறி மோதிய வேகத்தில் விற்பனை நிலையத்தின் முன்பக்க வேலிகள், பாதுகாப்புத் தூண்கள் மற்றும் கட்டிடத்தின் முகப்புப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளன. அதிகாலை நேரம் என்பதால் வீதியில் நடமாட்டம் குறைவாக இருந்தமையால் பெரும் உயிர்ச்சேதம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நாவிதன்வெளியில் நடைபெற்ற சித்திரைக் கொண்டாட்டம்..!

  • Apr 23, 2026 - 12:54 PM
  • 0 Comments

நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாபெரும் சித்திரைக் கொண்டாட்ட நிகழ்வு, நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நேற்று (22.04.2026) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச சபை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்பெரு விழாவில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கவி.கோடீஸ்வரன், எம்.எஸ்.உதுமாலெவ்வை மற்றும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு.பாஸ்கரன், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.தர்மதாஸ உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர். தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தையும் சித்திரை புத்தாண்டின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள் பிள்ளையான் மீது ஞானசார தேரர் சந்தேகம்..!

  • Apr 21, 2026 - 04:52 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான விசாரணைகள் மற்றும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விதம் குறித்து கலகொட அத்தே ஞானசார தேரர் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். பிள்ளையான் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்து தாக்குதல் தொடர்பான மிக முக்கியமான தகவல்கள் கிடைக்கப்பெற்று வருவதாக ஜனாதிபதியும் பிரதி அமைச்சரும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த போதிலும், ஓராண்டுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் அதனை உறுதிப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, குற்றப் புலனாய்வுத் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

300 அடி பள்ளத்தில் பாய்ந்த மகிழுந்து – ஒருவர் பலி – மூவர் காயம்..!

  • Apr 17, 2026 - 03:23 PM
  • 0 Comments

பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவிற்குள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (17.04.2026) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். இந்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே ஆண் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மகிழுந்தின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு..!

  • Apr 17, 2026 - 03:19 PM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதம பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆகியோரின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சந்தேகநபரை ஏப்ரல் மாதம் 28ஆம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.பல்கலை விரிவுரையாளர் படுகொலை ; மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை..!

  • Apr 17, 2026 - 09:44 AM
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து சடலம் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயல்வது காணி சுவீகரிப்புக்கான முதல் படியா..?

  • Apr 16, 2026 - 10:33 AM
  • 0 Comments

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. தையிட்டி காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். காணியினை அளவீடு செய்வதனால் , காணிக்கான வரைபடத்தினை பெற்றுக்கொள்வதனால் , […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம்..!

  • Apr 16, 2026 - 09:26 AM
  • 0 Comments

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது தாயகத்தில் உள்ள மக்களையே பாதிக்கும் எனவும் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பினுடைய ஸ்தாபகர் விஜயரத்தினம் தனுஸ் தெரிவித்துள்ளார். இலக்கியா-தென்றல் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி ஜெயச்சித்திரா அண்மையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பானது […]