உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!

  • Apr 29, 2026 - 01:29 PM
  • 0 Comments

வவுனியா தோணிக்கள் சேக்கிளார் வீதியை சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது   காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/980316844562655

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நாச்சிமார் ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம்..!

  • Apr 28, 2026 - 04:38 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்திதிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். இரானும் வெளியேறியதை யாரிடமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்காது திடீரென வெளியேறியுள்ளனர். 25 வருடங்களுக்கு மேலாக குறித்த ஆலயப்பகுதியிலிருந்து நேற்று இராணுவம் வெளியேறியதை தொடர்ந்து அங்கு பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து அழித்துவிட்டு சென்றுள்ளனர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

  • Apr 23, 2026 - 02:14 PM
  • 0 Comments

கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்ச குண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் இன்று 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.23 மணி முதல் 11.28 வரையிலான சுபமுகூர்த்த வேளையில் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவாகம வித்யா பூஷணம்,சிவாச்சார்ய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஷ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேக கிரியைகளை நடாத்தினார்கள். ஆலய தர்மகர்த்தாக்களான இரா.திருநாவுக்கரசு கே.ஜெகமோகன் மற்றும் மா.சிதம்பரநாதன் எம்.ரவீந்திரன் உள்ளிட்ட பரிபாலன சபையினர் மற்றும் பெருமளவான […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டடத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை..!

  • Apr 23, 2026 - 01:14 PM
  • 0 Comments

கடிதத்தை கிழித்தெறிந்த நபரால் மோதல் யாழ் வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியில் சர்ச்சைக்குரிய காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி குடத்தனைப் பகுதியில் அமைந்துள்ள குறித்த காணியானது தனக்குச் சொந்தமானது எனக் கூறி நபர் ஒருவர் எவ்வித சட்டபூர்வ ஆவணங்களும் இன்றி அங்கு கட்டடம் ஒன்றை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இக்காணியில், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கிலும், தெற்கிலும் உள்ள சில குழுக்கள் இனவாதம் பேசி அரசியல் நடத்துகின்றன..!

  • Apr 23, 2026 - 10:44 AM
  • 0 Comments

கடந்த கால ஆட்சியாளர்கள் யாழ்ப்பாணத்தை கைவிட்டிருந்தனர். ஆனால் எமது ஆட்சி அவ்வாறு இல்லை. யாழ்ப்பாணம் மற்றும் தீவக பகுதிகளுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்றைய தினம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவ்வாறு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நுவரெலியாவுக்கு விஜயம் செய்த இந்திய துணை ஜனாதிபதி..!

  • Apr 20, 2026 - 12:13 PM
  • 0 Comments

இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20.04.2026) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்..!

  • Apr 20, 2026 - 10:57 AM
  • 0 Comments

தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம்..!

  • Apr 16, 2026 - 09:26 AM
  • 0 Comments

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது தாயகத்தில் உள்ள மக்களையே பாதிக்கும் எனவும் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பினுடைய ஸ்தாபகர் விஜயரத்தினம் தனுஸ் தெரிவித்துள்ளார். இலக்கியா-தென்றல் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி ஜெயச்சித்திரா அண்மையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பானது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

  • Apr 13, 2026 - 04:24 PM
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/847912595000656

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இருபெண்களை துஸ்பிரயோகம் செய்த மதபோதகர் உள்ளிட்ட மூவர் கைது..!

  • Apr 13, 2026 - 03:57 PM
  • 0 Comments

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திருச்சபை ஒன்றின் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக போதகர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வவுனிக்குளம் பகுதிக்கு சென்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொண்டாட்டம் முடிந்து அவர்கள் திரும்பும் போது இரு பெண்களும் , போதகர் உள்ளிட்ட மூன்று ஆண்களும் […]