உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் 33 நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுப்பு..!

  • May 13, 2026 - 09:05 AM
  • 0 Comments

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது பெருக்கெடுத்து வருவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (13.05.2026) காலை 6.00 மணி நிலவரப்படி இந்தத் தகவல் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார். இவ்வாறு பெருக்கெடுக்கும் பிரதான நீர்த்தேக்கங்களில் அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, பதுளை மாவட்டத்தின் அம்பேவெல, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மௌ-ஆர, லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில யோதவாவி மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்கள் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவேந்தல்..!

  • Apr 20, 2026 - 11:12 AM
  • 0 Comments

தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம்(19.04.2026) தமிழ் மக்கள் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அன்னை பூபதி அம்மாவின் பேத்தி கலந்து கொண்டு ஈகைச்சுடரை ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கத்தை செலுத்தினார். தொடர்ந்து , நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இரா. சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியால் சபையில் சிறுபரபரப்பு..!

  • Apr 10, 2026 - 12:53 PM
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (10.04.2026) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, இரா. சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியால் சபையில் சிறுபரபரப்பு ஏற்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘அஸ்வெசும’ நலத்திட்டம் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்பிலும், அங்கு மீன்பிடித்துறை அமைச்சரால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்தும் சாணக்கியன் எம்.பி. இதன்போது கருத்து வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எழுந்து விளக்கமளித்தார். அமைச்சரின் விளக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த சாணக்கியன் எம்.பி., “நான் அமைச்சரின் பெயரைக் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்..!

  • Apr 9, 2026 - 10:22 AM
  • 0 Comments

மன்னார் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று(08.04.2026) மாலை 2.30 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்ற நிலை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதேவேளை, மாவட்ட விவசாயப் பிரிவின் தற்போதைய செயற்பாடுகள், விவசாயிகளுக்கு வங்கிகள் வழங்கும் சேவைகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. மேலும், மத்திய மற்றும் மாகாண […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கு தொடரூந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்..!

  • Apr 9, 2026 - 10:16 AM
  • 0 Comments

வடக்கு தொடரூந்து பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று(09.04.2026) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் நகரங்களுக்கு இடையிலான ரயில் மற்றும் யாழ்ப்பாண இரவு நேர தபால் ரயில் ஆகியன இன்று முதலும், யாழ் தேவி ரயில் நாளை முதலும் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் நாட்டைத் தாக்கிய “டித்வா” புயல் காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு விஜயம்..!

  • Apr 8, 2026 - 02:29 PM
  • 0 Comments

சர்வதேச புற்தரைஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அழைப்பின் பெயரில் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் காசிப் பிள்ளை சதீசன் தலைமையில் சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் அவர்கள் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு வரவேற்கப்பட்டார். அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தை பராமரிப்பதற்கு பல கோடி […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் CEO கபில சந்திரசேன மீளவும் விளக்கமறியலில்..!ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் CEO கபில சந்திரசேன மீளவும் விளக்கமறியலில்..!

  • Apr 2, 2026 - 01:50 PM
  • 0 Comments

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதவான், சந்தேகநபரான கபில சந்திரசேனவை ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் கோரிக்கை..!

  • Mar 25, 2026 - 11:08 AM
  • 0 Comments

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் குமார ஜயகொடி இதனைத் தெரிவித்தார். முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது […]

புதியவை உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 25, 2026 - 10:45 AM
  • 0 Comments

25.03.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை..!

  • Mar 20, 2026 - 01:41 PM
  • 0 Comments

இலங்கை வாழ். முஸ்லிம்கள் நாளை (21.03.2026) நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில், இன்று (20.03.2026) காலை 6.30 மணியளவில் காத்தான்குடி கடற்கரையில் சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.