9 indian fishermen arrested in sri lankan waters | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

09 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது..!

  • Aug 13, 2026 - 11:03 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். நேற்று (12.08.2026) இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த 9 இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். குறித்த மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடல் அடிவாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ‘அடிமடி வலை’ (Bottom Trawling) முறையைப் பயன்படுத்தி […]

deputy minister forms ward councils in vadamarachchi | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய பிரதி அமைச்சர்..!

  • Aug 10, 2026 - 09:56 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், வடமராட்சியில் , வல்வெட்டித்துறை , தொண்டமானாறு , கெருடாவில் தெற்கு, ஆகிய உள்ளூராட்சி வட்டாரங்களில் , தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை ஆரம்பித்து […]

harak kata bail request postponed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஹரக் கட்டாவின் பிணைக் கோரிக்கை பிற்போடப்பட்டது..!

  • Aug 3, 2026 - 02:03 PM
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தபோது தப்பிச் செல்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகச் சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ​ குறித்த வழக்கு இன்று (03.08.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. […]

national integrity week begins today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்..!

  • Jul 27, 2026 - 11:09 AM
  • 0 Comments

“நேர்மையான கலாச்சாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம் ; “நேர்மையான கலாச்சாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நேர்மை வாரம் இன்று (ஜூலை 27) முதல் ஜூலை 31 வரை முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன. “தேசிய நேர்மை வாரம்” […]

black july anti tamil violence peak | Pathivu News தமிழின அழிப்பு புதியவை

கறுப்பு யூலை தமிழர்கள் மீதான சிங்கள இனவெறியின் உச்சம்..!

  • Jul 23, 2026 - 01:08 PM
  • 0 Comments

23.07.1983 சிங்களர்களின் ஆட்சிக் காலம் தமிழர்களின் இருண்ட காலம் என்றே வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்படும் அளவுக்கு மிகவும் கொடுரமானது. இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களின் நிலப்பகுதிகள் சிங்களத்தால் பறிக்கப்பட்ட பின்னாலும் மீதமுள்ளவையே தமிழர் பகுதிகளாக நீடிக்கின்றன. தமிழர் என்ற தேசிய அடையாளத்தை முற்றிலும் துடைத்தழிக்க துடித்த சிங்களப் பேரினவாத அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று இனப்படுகொலை செய்து முடித்திருக்கிறது. காலங்கள் கடந்தாலும் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகள் நம் இரத்தத்தை உறைய வைப்பவை. நடத்தப்பட்ட படுகொலைகள் நம் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் […]

jayalath bandara dissanayake arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது..!

  • Jul 15, 2026 - 11:19 AM
  • 0 Comments

பண மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி, வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 27,500,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அதன் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட […]

drone over jaffna prison one arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் பறந்த ட்ரோன்;ஒருவர் கைது..!

  • Jul 14, 2026 - 11:27 AM
  • 0 Comments

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் “ட்ரோன்” பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் , நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை வேளை “ட்ரோன்” பறந்துள்ளது. அதனை அவதானித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் “ட்ரோனை” பறக்க விட்ட இளைஞனை கைது செய்ததுடன் , ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றி இருந்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் […]

district planning committee | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழு கூட்டம்..!

  • Jun 30, 2026 - 12:33 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழு கூட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30.06.2026) இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னேற்றும் நோக்கில் பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் நீண்டகால மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, மயிலத்தமடு […]

sri lanka thunderstorm alert | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை..!

  • Jun 10, 2026 - 09:42 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய […]

jaffna dengue program | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாளை முதல் யாழில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்..!

  • Jun 8, 2026 - 10:59 AM
  • 0 Comments

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக யாழ்.மாவட்டத்தில் அதிக ஆபத்துள்ள கரவெட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கோப்பாய், சங்கானை, சாவகச்சேரி, நல்லூர், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் ஜீன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ஆம் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp