உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

முன்னாள் இராணுவ வீரர் கைக்குண்டுடன் கைது..!

  • Apr 28, 2026 - 10:17 AM
  • 0 Comments

எட்டவீரகொல்லேவ, கோன்கொல்லேவ பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று, 52 டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் 30 ஒன்பது மி.மீ ரகத் தோட்டாக்கள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எட்டவீரகொல்லேவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எட்டவீரகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டவீரகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்..!

  • Apr 27, 2026 - 11:02 AM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 […]

செய்திகள் இந்தியா புதியவை முக்கிய செய்திகள்

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்..!

  • Apr 23, 2026 - 01:02 PM
  • 0 Comments

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. சென்னை – நீலாங்கரையில் தனது வாக்கினை சீமான் செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “தேர்தலில் வாக்கு செலுத்தாதவர்களுக்கு என்ன பிரச்சினை என்றவொரு கேள்வி உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லையா, இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை இல்லையா […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

புதிய சேவைப் பிரமாண வரைபு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிப்பு..!

  • Apr 8, 2026 - 01:19 PM
  • 0 Comments

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் நேரடிப் பங்கேற்புடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (EDO/CDO) ஆகியோரின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய சேவைப் பிரமாண வரைபு நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. முக்கிய சந்திப்புகள் மற்றும் கையளிப்பு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், கொழும்பில் உள்ள முக்கிய அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு நேரில் சென்று இந்த வரைபினை கையளித்தனர் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம்: நாட்டின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்று முதல் லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் ஆரம்பம்..!

  • Apr 8, 2026 - 09:53 AM
  • 0 Comments

பண்டிகைக் காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுவினை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 7,000 மெற்றிக் தொன் லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த 6ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈழத்தமிழ் இளைஞருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை..!

  • Apr 7, 2026 - 10:25 AM
  • 0 Comments

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 38 வயதான சுகீர்தன் தங்கராசா என்பவர் போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. கடந்த ஆண்டு புரட்டாதி 15ஆம் திகதி, கிங்ஸ்டன் மயானம் பகுதியில் சிறுவனை நோக்கி ஆபாச மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டிய சம்பவம் தொடர்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்பு, ஆவணி மாதம் அவர் தங்கியிருந்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு..!

  • Mar 20, 2026 - 10:44 AM
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தார். நேற்று (19.03.2026) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மலையகச் சமூகத்தின் கல்வியில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Mar 20, 2026 - 09:43 AM
  • 0 Comments

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் […]

செய்திகள்

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • Feb 27, 2025 - 10:53 AM
  • 0 Comments

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அரவிந்த ஸ்ரீநாத நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத உத்தியோகபூர்வமாக நேற்று (26-02-2025) கடமைகளைப் பொறுப்பேற்றார். களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப்பிரிவில் பட்டம் பெற்ற இவர் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் கற்றுள்ளதுடன் பல தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனை அநுர அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது- தீவக சிவில் சமூகம்

  • Jan 22, 2025 - 08:50 PM
  • 0 Comments

மேன்முறையீட்டு நீதிபதிக்கான பதவி உயர்விற்கு அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அதில் கவனம் செலுத்தாது நீதிபதி இளஞ்செழியனுக்கு அநுர அரசு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாடியுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது’ இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் […]