பொருத்தமான உணவுப்பாதுகாப்பு முறைகளைப் பேணாமையினால் ஆபிரிக்க மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன..!
பொருத்தமான உணவுப்பாதுகாப்பு முறைகளைப் பேணாமையினால் ஆபிரிக்க மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என பூநகரிப் பிரதேச மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். பூநகரி நான்காம் கட்டைப் பகுதியில் பொதுமக்களுக்கு உணவுப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; பொருத்தமான உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை வீடுகளிலும், உணவுகையாளும் நிறுவனங்களிலும் நாம் கடைப்பிடிக்காமையினால் நுண்ணங்கிகள் மற்றும் நச்சு இரசாயனங்கள் மூலம் நோய்த்தாக்கங்களும் […]









