மீசாலை பகுதியில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு உரிமையாளரிடம் கையளிப்பு..!
தென்மராட்சிப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு கிராமத்தில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு இன்று செவ்வாய்க்கிழமை(28.04.2026) உரிமையாளரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில், இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, 30 வீட்டுத் திட்டங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்திருந்தார் அந்த வருகையின்போது மீசாலை கிழக்கில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேற்படி வீட்டிற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்திருந்தார். இந்த நிலையிலேயே கட்டி முடிக்கப்பட்ட […]









