உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை; அமைச்சர் வசந்தவின் நிலைப்பாடு..!

  • Apr 21, 2026 - 10:00 AM
  • 0 Comments

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி விவகாரம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலுள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (20) இரவு டி.வி. தெரணவின் ‘360’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் மோசடி நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை என்றும், ஏற்படக்கூடிய சாத்தியமான நிலமைகள் குறித்து மட்டுமே அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நுவரெலியா கிரகரி வாவி சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்த திட்டம்..!

  • Apr 20, 2026 - 01:24 PM
  • 0 Comments

நுவரெலியா கிரகரி வாவியின் சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார். நேற்று (19.04.2026) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நுவரெலியா கிரகரி வாவியில் சுமார் 120 சுற்றுலா படகுகள் உள்ளன. நேற்று இடம்பெற்ற விபத்தையடுத்து, படகு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை அழைத்து இது குறித்து […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் காணிச் சமபங்கு அவசியம்..!

  • Apr 20, 2026 - 10:19 AM
  • 0 Comments

சாய்ந்தமருதில் நடைபெற்ற கருத்தாடலில் வலியுறுத்தல் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதி, “அம்பாறை மாவட்டம்: காணிச் சமபங்கு வேண்டும்” என்ற தலைப்பில் சட்டத்தரணிகளான ஆஷிக் அலியார் மற்றும் சர்ஜுன் ஜமால்தீன் ஆகியோர் எழுதிய நூலை மையமாகக் கொண்டு விரிவான கருத்தாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன், ஒன்றியத்தின் முகாமைத்துவ செயலாளர் பிர் முகம்மது தலைமை தாங்கினார். ஒன்றியத்தின் நிர்வாக செயலாளர் எம்.எம். உதுமாலெப்பையின் நெறிப்படுத்தலில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

படகில் 400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்..!

  • Apr 17, 2026 - 09:39 AM
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. குறித்த போதைப்பொருள் தொகையைப் பார்வையிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், அந்தப் படகில் இருந்த போதைப்பொருள் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் சோதனையிடப்பட்டதை அடுத்து, நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம்..!

  • Apr 16, 2026 - 09:26 AM
  • 0 Comments

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது தாயகத்தில் உள்ள மக்களையே பாதிக்கும் எனவும் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பினுடைய ஸ்தாபகர் விஜயரத்தினம் தனுஸ் தெரிவித்துள்ளார். இலக்கியா-தென்றல் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி ஜெயச்சித்திரா அண்மையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பானது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாடசாலைைளுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு..!

  • Apr 10, 2026 - 09:49 AM
  • 0 Comments

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10.04.2026) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கு தொடரூந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்..!

  • Apr 9, 2026 - 10:16 AM
  • 0 Comments

வடக்கு தொடரூந்து பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று(09.04.2026) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் நகரங்களுக்கு இடையிலான ரயில் மற்றும் யாழ்ப்பாண இரவு நேர தபால் ரயில் ஆகியன இன்று முதலும், யாழ் தேவி ரயில் நாளை முதலும் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் நாட்டைத் தாக்கிய “டித்வா” புயல் காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு முன்னிட்டு யாழில் எழுச்சி மாநாடு..!

  • Apr 8, 2026 - 02:45 PM
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், 1976ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழர் மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உணவளித்த எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகள்..!

  • Apr 8, 2026 - 01:13 PM
  • 0 Comments

மன்னார் – நறுவிலிகுளத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலம் ஒன்றில், பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காளைகளின் எஜமான் இயற்கை எய்திவிட்டார். தான் இறந்தால், தனது உடலை காளைகள் பூட்டிய தனது மாட்டு வண்டியிலேயே எடுத்து செல்ல வேண்டும் என்பது அவனது கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அவரது இறுதி ஊர்வலமானது அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறு காளைகள் பூட்டிய வண்டிலிலேயே இடம்பெற்றது. எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகளின் முகத்திலும் சோக […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 8, 2026 - 09:35 AM
  • 0 Comments

08.04.2026 மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் […]