vaddukoddai | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு முன்னிட்டு யாழில் எழுச்சி மாநாடு..!

  • Apr 8, 2026 - 02:45 PM
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், 1976ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழர் மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் […]

owner body incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உணவளித்த எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகள்..!

  • Apr 8, 2026 - 01:13 PM
  • 0 Comments

மன்னார் – நறுவிலிகுளத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலம் ஒன்றில், பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காளைகளின் எஜமான் இயற்கை எய்திவிட்டார். தான் இறந்தால், தனது உடலை காளைகள் பூட்டிய தனது மாட்டு வண்டியிலேயே எடுத்து செல்ல வேண்டும் என்பது அவனது கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அவரது இறுதி ஊர்வலமானது அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறு காளைகள் பூட்டிய வண்டிலிலேயே இடம்பெற்றது. எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகளின் முகத்திலும் சோக […]

sl weather 18 2 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 8, 2026 - 09:35 AM
  • 0 Comments

08.04.2026 மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் […]

two electrocuted | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சாரம் தாக்கி இருவர் சாவு..!

  • Apr 7, 2026 - 10:05 AM
  • 0 Comments

பொல்கஹவெல, பங்களாவத்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மின்சாரம் தாக்கி இருவர் சாவடைந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பயிர் நிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, குறித்த காணியின் காவலாளியாகப் பணியாற்றிய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

qr code guide | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

QR அறிமுகமாகும் விதம் குறித்து ஜனாதிபதி விளக்கம்..!

  • Apr 6, 2026 - 12:39 PM
  • 0 Comments

சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் நிலவும் சில சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமானால், ஒரு நாடாக நாம் டிஜிட்டல் பரிமாற்றங்களுக்குள் நுழைய வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, முறைசாரா பொருளாதாரத்தை முறைசார்ந்த பொருளாதாரமாக […]

wattala textile | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வத்தளையில் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து..!

  • Apr 6, 2026 - 10:07 AM
  • 0 Comments

வத்தளை, மாபோல தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (06.04.2026) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த 13 அதிகாரிகள் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

npp party | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கும் மஹிந்த கம்பனிக்கு இடையேயும் வேறுபாட்டை காணமுடியாமல் உள்ளது..!

  • Apr 6, 2026 - 10:02 AM
  • 0 Comments

கடந்த. ஜனாதிபத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பன இடம்பெற்ற காலத்தில் தற்போதைய ஆட்சியாளர்களால் பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளமை வேதனையளிக்கும் விடயமாகும். அதில் ஒன்றுதான் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவோம் என்பதாகும். ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றமை பொதுமக்களின் அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும். இவ்வாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் குறிப்பிட்டார். இத் தொழிற்சங்கத்தின் உயர்பீட கூட்டம் நேற்றைய தினம் […]

e0ae87e0aeafe0ae95e0af8de0ae95e0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aea8e0aebee0aeb3e0af88 e0aeaee0aebee0aeaae0af86e0aeb0 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இயக்கச்சியில் நாளை மாபெரும் போராட்டம்..!

  • Apr 1, 2026 - 11:33 AM
  • 0 Comments

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ தேவைக்காக 25ஏக்கர் காணியை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இயக்கச்சி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 25ஏக்கர் காணியை இராணுவ முகாமினை அமைக்கும் நோக்குடன் நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காணி சுவீகரிப்பின் முதல்கட்டமாக காணியினை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவை திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் தனியார் காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்கு எதிராக […]

e0aea4e0af88e0aeafe0aebfe0ae9fe0af8de0ae9fe0aebf e0ae89e0aeb0e0aebfe0aeaee0af88e0aeaae0af8d e0aeaae0af8be0aeb0e0aebee0ae9fe0af8de0ae9f | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி உரிமைப் போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்..!

  • Mar 30, 2026 - 11:37 AM
  • 0 Comments

உண்மை வெல்ல உறவே எழு..! தையிட்டியில்சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்களின் உரிமை காக்கும் அமைதிப் போராட்டத்துக்கு அழைப்பு. காலம் :- 31.03.2026 – மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மறுநாள் புதன்கிழமை 01.04.2026 (பெளர்ணமி தினம்) – காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த போராட்டத்தில் அனைத்து பொதுமக்களும், அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், எந்தவொரு பேதமும் இன்றி ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். […]

e0aeaae0aebfe0aeb0e0aea4e0aeaee0aeb0e0af8d e0aea4e0aeb2e0af88e0aeaee0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0aea8e0ae9fe0af88e0aeaae0af86e0aeb1 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வராத அதிபர், ஆசிரியர்களுக்கு விசாரணை..!

  • Mar 26, 2026 - 11:04 AM
  • 0 Comments

கடந்த மார்ச் 15ஆம் திகதி தங்காலை நகர மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்துகொள்ளாமை தொடர்பாக தங்காலை வலயக் கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வலயக் கல்வி அலுவலகத்தினால் முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும், கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் உத்தியோகபூர்வ கடிதங்களை அனுப்பியுள்ளார். குறித்த கூட்டத்திற்கு ஆசிரியர்கள் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp