Pathivunews.com️ 2026-06-09T14:30:32+0000

ஒலுவில் துறைமுகம் விஞ்ஞான ரீதியான முறையான திட்டமிடலுடன்தான் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. தெளிவுபடுத்தினார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி 09.06.2026

Pathivunews.com️ 2026-06-09T14:25:56+0000

மன்னாரில் மாட்டு இறைச்சி விலை நிர்ணயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! மன்னார் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்பனை விலையை ஒழுங்குபடுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (09.06.2026) செவ்வாய்க்கிழமை நண்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டம் பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்நோக்கும் பிரதேசமாக இருப்பதுடன், அப்பகுதி மக்கள் மாட்டிறைச்சியை அதிகம் விரும்பி பயன்படுத்தி வருவதையும் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி மாட்டிறைச்சி விற்பனை விலைகளை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ தனி மாட்டிறைச்சி 2,200 ரூபாவிற்கும், 800 கிராம் இறைச்சியுடன் 200 கிராம் எலும்பு சேர்த்த ஒரு கிலோ இறைச்சி 2,000 ரூபாவிற்கும், தனி முள்ளு இறைச்சி 1200 ரூபாவிற்கும், ஒரு கிலோ ஈரல் 2,500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், தீர்மானிக்கப்பட்டதுடன், நுகர்வோர் இறைச்சியின் எடையை பார்க்கும் அளவிற்கு தராசுகள் பயன்படுத்த வேண்டும் எனவும், இறைச்சிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதோடு விலைப்பட்டியலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த விலை நிர்ணயம் தொடர்பில் மன்னார் அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், "மன்னார் மாவட்டத்திலேயே மாட்டிறைச்சி என்பது ஒரு முக்கியமான உணவாகக் காணப்படுகிறது. எனவே இன்றைய தினம் இந்த விசேட கூட்டமானது அனைத்து பங்குதாரர்களுடனும் நடாத்தப்பட்டது. அத்தோடு நேற்றைய தினம் பண்ணையாளர்களுடன் ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதிலே மக்களுக்கு நியாய விலையில் இறைச்சியை வழங்கும் பொருட்டு மாடுகளை இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு கிலோ ஒன்று 1700 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்தோடு 02.06.2026 அன்று எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இன்றைய தினமும் குறிப்பிட்ட விலைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது .என்று தெரிவித்தார். மேலும் ,அந்த விலைகளுக்கு அமைவாகவே மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும் எனவும் மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அத்துடன் இந்த விலையானது விலை பாதுகாப்பு அதிகாரிகளினால் கடுமையாக பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் . அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இறைச்சியின் விலையை நியாயமாகப் பேணும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை மாடுகளை இறைச்சிக்காக மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்வதற்குத் தடை விதிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே எட்டப்பட்ட இந்த தீர்மானங்களை செயல்படுத்தும் பொருட்டு பொதுச் சுகாதார அதிகாரிகள் கால்நடை வைத்தியர்கள் போன்றவர்களின் சேவைகளில் ஏற்படுகின்ற தாமதங்களை நிவர்த்திப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார். மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வட மாகாண விவசாய கால்நடை அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், நகர சபைத் தலைவர், மாந்தை மேற்கு பிரதேச சபைத் தலைவர், ,கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட பொது சுகாதார அதிகாரிகள், இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Pathivunews.com️ 2026-06-09T14:03:02+0000

செம்மணி மனித புதைகுழியில் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள்..! செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய(09.06.2026) தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து நாணய குற்றி ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சிசுவினுடைய என்பு கூட்டு தொகுதி ஒன்று உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

1
Pathivunews.com️ 2026-06-09T13:59:24+0000

சரண குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை..! ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். இதற்கு மேலதிகமாக, அந்த வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு 18 இலட்சம் ரூபா அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்காக மூன்று வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட போது, அவற்றின் உரிமையாளர்களுக்கு சாதகமாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தீர்ப்பை அறிவித்து மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிடுகையில், பிரதிவாதிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளை, நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் முறைப்பாட்டாளர்கள் நிரூபித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பொருளாதாரம் வங்குரோத்தடைவதற்கும் இத்தகைய செயல்கள் வழிவகுத்துள்ளன என வழக்குத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு நிறுவனங்களில் இடம்பெறும் இவ்வாறான ஊழல் நடவடிக்கைகள், அந்த நிறுவனங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கக் காரணமாக அமைகின்றன என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்தப் பிரதிவாதிக்குத் தண்டனை விதிக்கும் போது, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 303 ஆவது பிரிவின் கீழ் மென்போக்கைக் கையாளுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், இக்குற்றத்தின் தன்மையைக் கருத்திற் கொள்ளும் போது, அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்களைத் ஊக்கமிழக்கச் செய்வதற்கு ஏதுவான வகையிலான தண்டனையொன்றை வழங்க நீதிமன்றம் விதிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Pathivunews.com️ 2026-06-09T13:41:12+0000

ஜனநாயகத்தை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படாது..! தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தையும், பொது அவசர கால நிலையினையும், நாட்டின் ஜனநாயகத்தை மீறுவதற்காக அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தாது என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று (9) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவசர கால நீடிப்பு தொடர்பான இன்றைய விவாதத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாடு தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் வாக்குறுதியை வழங்கியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தற்போதும் அந்த நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. விரைவில் குறித்த சட்டத்தை நீக்குவதற்கு நீதி அமைச்சு உள்ளிட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனினும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், பல உயிர் பலிகளையும் ஏற்படுத்திய மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியையும் அதன் பின்னணியையும் கண்டறிவதற்காக பயன்படுத்தியது ஒரு குற்றமா என கேள்வி எழுப்புகிறோம். எனவே இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களை கைது செய்வதற்காக தற்போது நடைமுறையில் உள்ள இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் விரைவில் குறித்த சட்டங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Pathivunews.com️ 2026-06-09T13:39:44+0000

வீடுகளில் மட்டுமல்ல பொது இடங்களிலும் பெருகும் டெங்கு..! வீடுகளில் மட்டுமல்ல... பொது இடங்களிலும் பெருகும் டெங்கு! மூன்று நாட்கள் கொண்ட டெங்கு ஒழிப்பு விசேட திட்டத்தின் முதலாம் நாள் சோதனையின் போது, பரிசோதிக்கப்பட்ட ஒட்டுமொத்த 31,196 வளாகங்களில் 2,097 வளாகங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு பிரகடனப்படுத்திய மூன்று நாட்கள் கொண்ட விசேட தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் நேற்று (08) 14 மாவட்டங்களைச் சேர்ந்த 72 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஆரம்பமானது. இந்த முப்பகல் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை (10) வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இன்று அதன் இரண்டாவது நாளாகும். நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட வளாகப் பரிசோதனைகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, நேற்று சோதனையிடப்பட்ட ஒட்டுமொத்த வளாகங்களின் எண்ணிக்கை 31,196 ஆகும். அவற்றில், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான இடங்களைக் கொண்ட 8,121 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், 2,097 வளாகங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினத்தில் 1,165 அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதுடன், 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நேற்று 56 பாடசாலைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 31% பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 07 பாடசாலைகளில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் துறையைச் சேர்ந்த 178 வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 93 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், 41 இடங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டெடுக்கப்பட்டு, 24 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 189 அரச நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 50 நிறுவனங்களிலேயே டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய 70 அபாயகரமான இடங்களும் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. பரிசோதிக்கப்பட்ட 96 வழிபாட்டுத் தலங்களில், 18 வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய 42 அபாயகரமான இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றைய தினத்தில் 77 தொழிற்சாலை வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவற்றில் 17 தொழிற்சாலைகளில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த முப்பகல் டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நேற்று 28,230 வீடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன், நுளம்புகள் பெருகும் அபாயமுள்ள 7,088 வளாகங்களும், 1,760 வீடுகளில் டெங்கு நுளம்புப் புழுக்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கமைய 657 வீடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின் தரவுகளின்படி, பாடசாலைகள் மற்றும் கட்டுமானப் பகுதிகள் போன்ற இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான போக்கு மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படுவது தெரியவந்துள்ளது. எனவே, தமது சுற்றாடலைத் தூய்மையாக வைத்திருக்குமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்குப் பொறுப்புடன் செயற்படுமாறும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதுடன், இந்த முப்பகல் டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு தங்களால் இயன்ற அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Pathivunews.com️ 2026-06-09T13:36:04+0000

செம்மணி மனித புதைகுழியில் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள்..! செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய(09.06.2026) தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து நாணய குற்றி ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சிசுவினுடைய என்பு கூட்டு தொகுதி ஒன்று உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களுடைய 08 என்பு கூட்டு தொகுதி உட்பட 09 என்பு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் சிசுவினுடைய என்பு கூடு உட்பட 09 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதேவேளை இன்றைய அகழ்வு பனியின் போது என்பு கூடொன்றின் மீதிருந்து நாணய குற்றி ஒன்று மீட்கப்பட்டு , சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையி. செம்மணியில் இதுவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது 327 மனித என்பு கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , 311 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Pathivunews.com️ 2026-06-09T13:23:01+0000

100 டன் போதைப்பொருள் கலக்கப்பட்ட மரக்கட்டைகளை சிலி பறிமுதல் செய்தது..! சிலி தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளது. ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த, பெரும்பாலும் கோகோயின் மற்றும் கெட்டமைன் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்கள் கலக்கப்பட்டிருந்த சுமார் 1,080 டன் மரக்கட்டைகள் கண்டுபிடித்தது. மரக்கட்டைகள் அனுப்பப்பட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 டன்களுக்கும் அதிகமான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக சிலி அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அரிகா, சான் அன்டோனியோ மற்றும் வால்பரைசோ துறைமுகங்களில், சுமார் 100 டன் சட்டவிரோத போதைப்பொருட்கள் கலந்திருந்த மொத்தம் 1,080.8 டன் மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலி சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு அதன் சேருமிடங்களைச் சென்றடைந்திருந்தால், சிறப்பு ஆய்வகங்களில் மேம்பட்ட வேதியியல் செயல்முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை மீட்க வேண்டியிருக்கும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. அந்த மரக்கட்டைகள் ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1
Pathivunews.com️ 2026-06-09T13:22:31+0000

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு..! 3ம் நாள் 09.06.2026

1
Pathivunews.com️ 2026-06-09T12:58:34+0000

மின்சாரம் தாக்கி 23 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு..! கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று காலை(09.06.2026) தொழில் புரிந்து கொண்டிருந்த நிலையில் இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என்ற இளைஞனே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் .

6
Pathivunews.com️ 2026-06-09T12:45:13+0000

இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை..! 09.06.2026

4
Pathivunews.com️ 2026-06-09T12:40:13+0000

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை..! 09.06.2026

3
Pathivunews.com️ 2026-06-09T12:39:48+0000

ஒரு சங்கீதனை முடக்குவதன் மூலம் விடுதலைக் குரலையும் ஒடுக்கலாம் என்று நினைப்பது அறியாமை..! ஒரு சங்கீதனை முடக்குவதன் மூலம் விடுதலைக் குரலையும் ஒடுக்கலாம் என்று நினைப்பது அறியாமை என பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும் -சமூக செயற்பாட்டாளருமான ஜெயச்சித்ரா சுட்டிக்காட்டியுள்ளார். கலைஞர் சங்கீதனின் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; சங்கீதனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அநுர அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன். கலை என்பது தனி நபர் கிடையாது. அது மக்கள் கூட்டம் தமக்குள்ளே கடத்திக் கொள்ளும் நெருப்பு. இவ்வாறான அடக்குமுறைகள் பாடல்களை ஒருபோதும் நிறுத்தாது. மாறாக மேலும் புதிய குரல்களை உருவாக்கும். வலிகளுக்குள் ஒளிந்திருக்கும் உண்மைகளை எதிர்கொள்ளத் துணிவில்லாத கோழைத்தனமே சங்கீதனை சிறை பிடிக்க வைத்துள்ளது. இந்த அரசு தொடர்ச்சியாக இளைஞர்களை குறிவைத்து வருகிறது. சிங்கள பேரினவாத அரசின் உச்ச கட்ட பயம் இவ்வாறான கைதுகள் ஊடாக வெளிப்படையாக தெரிகின்றது.என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

3
Pathivunews.com️ 2026-06-09T10:34:45+0000

யாழ் நுணாவில் பகுதியில் உயிருடன் பிடிபட்ட சருகுப்புலி..! 🌐 முழு செய்திகளையும் வாசிக்க https://pathivunews.com/nunavil-civet-capture/ #BreakingNews #TamilNews #CrimeNews #Arrest #PoliceInvestigation #TamilNaduNews #PathivuNews #TrendingNews #Justice #LiveNews #TamilBreakingNews #CrimeUpdate #ViralNews #TamilMedia #NewsUpdate

5
Pathivunews.com️ 2026-06-09T05:47:04+0000

04ஆண்டுகள் சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை..! ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 4 ஆண்டுகள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, அந்த வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு 18 இலட்சம் ரூபா அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்காக மூன்று வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட போது, அவற்றின் உரிமையாளர்களுக்கு சாதகமாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

3
Pathivunews.com️ 2026-06-09T05:44:47+0000

மாகாண சபை தேர்தல் நடந்தால் வடக்கு தவிர ஏனைய இடங்களில் பெரமுன தனித்து ஆட்சியமைக்குமாம்..! நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து ஆட்சியமைக்கும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஆதரவு மிக வேகமாகப் பெருகி வருகின்றது. குறிப்பாக, நாட்டின் கிராமிய மட்டங்களில் பொதுஜன பெரமுனவுக்குப் பேராதரவு கிடைத்துள்ளது என்பதை எங்களால் களத்தில் நேரடியாகக் காண முடிகிறது. எனவே, எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள அச்சப்படும் நிலையில் எங்களது கட்சி இல்லை. அதனால்தான், இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தற்போதைய அரசுக்கு மிகவும் துணிச்சலாகவும், பகிரங்கமாகவும் நாங்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றோம். அரசியல் இலாபங்களுக்காகக் கட்சி தாவும் மக்கள் பிரதிநிதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பறிக்கக்கூடிய புதிய சட்ட மூலங்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல. சுயநல அரசியலைத் தடுக்கும் அத்தகைய சட்ட மூலங்களை நாடாளுமன்றத்தில் நாங்கள் நிச்சயமாக முழுமையாக ஆதரிப்போம்." - என்றார்.

3
1 Comments
Pathivunews.com️ 2026-06-09T05:42:47+0000

04ஆண்டுகள் சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை..! மேலும் வாசிக்க 👇 https://pathivunews.com/gunawardena-prison-sentence/

1
Pathivunews.com️ 2026-06-09T05:34:49+0000

மாகாண சபை தேர்தல் நடந்தால் வடக்கு தவிர ஏனைய இடங்களில் பெரமுன தனித்து ஆட்சியமைக்குமாம்..! மேலும் வாசிக்க 👇 https://pathivunews.com/peramuna-election-claim/

1
Pathivunews.com️ 2026-06-09T05:19:53+0000

இரு தினங்கள் மூடப்படும் யாழ் திருநெல்வேலி சந்தி வீதி..! திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதி பகுதிக்கு காப்பெற் இடும் பணிகள் நடைபெறவுள்ளதனால் நாளைய தினம் புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களும் குறித்த வீதிப்பகுதியானது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இப் பிரதேசத்தின் மிக நீண்ட காலப் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் நல்லூர் பிரதேச சபையினால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இச் செயற்றிட்டத்தின் முக்கிய கட்டமாக குறித்த பகுதிக்கு காப்பெற் இடும் பணிகள் நாளைய தினம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை (11.06.2026) ஆகிய இரு நாட்களும் இடம்பெறவுள்ள நிலையில் பின்வரும் விடயங்களை இப்பிரதேசத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இரு தினங்களும் குறித்த வீதிப்பகுதியானது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது. தங்களது வியாபார நிலையங்களுக்கு முன்னால் எந்த ஒரு வாகனங்களும் நிறுத்தப்படல் ஆகாது காப்பெற் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் குறித்த வீதிப்பகுதியானது உயர் அழுத்தம் கொண்ட காற்றுப் பம்பிகளைக் கொண்டு சுத்தம் செய்யபடும். அவ்வாறு சுத்தம் செய்யப்படும் போது எழுகின்ற தூசி மண்டலத்திருந்து தங்களது வியாபார நிலையங்களையும் வியாபர பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முக்கியமாக உணவுக் கடைகள் சுகாதார சீர்கேடுகள் ஏற்படாத வண்ணம் தங்கள் வியாபார நிலையங்களின் சுகாதாரம் இது தொடர்பில் மிகக் கூடிய கவனம் செலுத்த வேண்டும் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளுக்கு மிக நீண்ட கால இடையூறு ஏற்படாத வண்ணம் ஒரு திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக இச் செயற்றிட்டம் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளது. இதுவரை நாளும் தாங்கள் வழங்கிய ஒத்துழைப்பு போன்று இவ்விறுதிக் கட்டப்பணிகளுக்கும் தங்களுடைய பூரண ஒத்துழைப்பினை தந்துதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

3
Pathivunews.com️ 2026-06-09T05:17:59+0000

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் 'வட்டுக்கோட்டை -50 எழுச்சி மாநாடு தொடர்பாக, மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட எழுச்சிப்பாடல்.

4
Pathivunews.com️ 2026-06-09T05:01:03+0000

இரு தினங்கள் மூடப்படும் யாழ் திருநெல்வேலி சந்தி வீதி..! மேலும் வாசிக்க 👇 https://pathivunews.com/thirunelvely-road-closure/

2
Pathivunews.com️ 2026-06-09T04:56:18+0000

ஐயர் மந்திரத்தை மறந்த தருணம்..! இவர்களைப்போன்ற அரைவேக்காடுகளால் தான் சைவசமயம்?????

10
2 Comments
Pathivunews.com️ 2026-06-09T04:27:17+0000

யாழ் நுணாவில் பகுதியில் உயிருடன் பிடிபட்ட சருகுப்புலி..! யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி , நுணாவில் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கிராம மக்கள் பிடித்ததுள்ளனர் அதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் இருந்து மயக்கமருந்து மற்றும் கொண்டு செல்லும் கூடு போன்ற உபகரணங்கள் இன்றி வந்தவர்கள் நாளை வருவதாக கூறி செல்லமுற்பட்ட வேளை ஊரவர்கள் குழப்பம் அடைந்ததை அடுத்து, மற்றுமொரு வனஜீவராசிகள் திணைக்கள வாகனத்தை வரவழைத்து பாதுகாப்பாக கொண்டுசென்றுள்ளனர்.

9
1 Comments
Pathivunews.com️ 2026-06-09T04:26:24+0000

சுரேஷ் சலே விவகாரம் சிஐடிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு..! அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளுக்கு அமைய விளக்கமளிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளை இந்த வாரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் சலேவின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த நாட்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற ஆணைக்குழு அதிகாரிகள், சுரேஷ் சலேயிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளதுடன், அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூண்டுக்கு அருகில் இருந்த ஏனைய சந்தேகநபர்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும், சுரேஷ் சலேவின் நிலைமை குறித்துக் கண்டறிவதற்காக நேற்று (08) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளை கடந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தங்களால் அன்றைய தினம் வர முடியாது எனத் தெரிவித்து அவர்கள் வேறு ஒரு திகதியைக் கோரியிருந்தனர். இதற்கமைய, குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை இந்த வாரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

2
Pathivunews.com️ 2026-06-09T04:25:47+0000

மத்திய வங்கிக்கு காணாமல் போன பணம் குறித்து விளக்கமளிக்க காலவகாசம்..! திறைசேரியிலுருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமைக்கு மத்திய வங்கியும் பொறுப்புக்கூற வேண்டும் என நிதியமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மத்திய வங்கியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்க நிதிப் பற்றிய குழு நேற்று (08) பிற்பகல் கூடியது. இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் திறைசேரியினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு டிவி தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான '360' நடப்பு அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

2
Pathivunews.com️ 2026-06-09T04:25:28+0000

யாழ் நுணாவில் பகுதியில் உயிருடன் பிடிபட்ட சருகுப்புலி..! மேலும் வாசிக்க 👇 https://pathivunews.com/nunavil-civet-capture/

Pathivunews.com️ 2026-06-09T04:22:35+0000

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..! 09.06.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

3
Pathivunews.com️ 2026-06-09T04:21:32+0000

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை..! சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாகக் கைவிடப்பட்டது. சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த மழையே இதற்குக் காரணமாகும். இதன்படி, தொடரின் முதலாவது போட்டியில் பெற்ற 41 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றியின் மூலம் 1-0 என ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. நடுவர்கள் பலமுறை மைதானத்தைப் பரிசோதித்த போதிலும், மைதானப் பராமரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டியை ஆரம்பிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த இறுதி நேரமான இரவு 8.02 மணி வரையிலும் போட்டியை ஆரம்பிக்க முடியாது என அவர்கள் தீர்மானித்தனர். இருப்பினும், இந்த வெற்றியானது 23 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2003 ஆம் ஆண்டுக்கு பின் கரீபியன் தீவுகளில் இலங்கை அணி பெற்ற முதல் ஒருநாள் தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

2
Pathivunews.com️ 2026-06-09T04:21:04+0000

யாழ் நுணாவில் பகுதியில் உயிருடன் பிடிபட்ட சருகுப்புலி..! யாழ்ப்பாணம் நுணாவில் பகுதியில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

7
Pathivunews.com️ 2026-06-09T04:17:09+0000

World is in 'profound' crisis, Pope Leo tells Spain's parliament protection of religious freedom, ⁠saying that faith "cannot be relegated to silence as though it were irrelevant to public life". The pope likewise defended the privacy of the Catholic seal of confession, which obliges a priest not to reveal any information given to him by penitents. Several countries, including France, have debated whether to compel priests to report sexual abuse disclosed in confessions, following scandals that have shaken the Church internationally. Protecting the seal, Leo ⁠said, preserves "a sacred space of inner freedom, where the believer can open his or her soul before God". The Vatican said the abuse victims Leo met for one hour on Monday offered him suggestions for how the Church could respond to such cases, even as some victims said they had been excluded from the meeting and called the Church's response insufficient. In an earlier meeting with Catholic bishops, Leo said they must listen to survivors of abuse and offer them reparations.

2
Pathivunews.com️ 2026-06-09T04:15:29+0000

Strongest earthquake in nearly 150 years hits off Cuba, shakes Mexico, Florida A historically strong earthquake struck off Cuba’s northwest coast on Monday, according to official reports, shaking parts of Cuba, Mexico and ​Florida that are typically not prone to quakes. The U.S. Geological Survey (USGS) measured ‌the quake at a magnitude 6.1 at a shallow depth of 26 km (16 miles) and its epicenter 104 km west-northwest of Mantua, Cuba, about two to four hours by car from the ​capital Havana. Monday’s earthquake was unusual for this area of the Caribbean, said ​Paul Earle, a seismologist at the USGS, noting that the quake occurred ⁠within a tectonic plate, where earthquakes are usually more scattered and less frequent ​than when they occur along plate boundaries. An earthquake this strong had not hit within 322 ​km (200 miles) of Monday’s quake since 1880, when a 6.0 temblor hit near San Cristobal, Cuba, said Earle. Authorities have not yet reported any major damage or casualties, but the quake spiked concern ​in Cuba, where decades of economic crisis have left buildings in severe disrepair. Ongoing ​widespread blackouts across the region have made communications difficult. “It felt strong. I had never felt anything ‌like ⁠that,” said Yusmila Hernandez, 44, at her home in Pinar del Rio, in western Cuba. “People ran outside, everyone scared. I can’t even explain it. It felt like no earthquake has ever felt here before,” Hernandez said. USGS reported that shaking was also felt in Florida. ​In Mexico, the quake ​was felt in the ⁠tourist hubs of Cancun, Playa del Carmen and Tulum on the country’s Yucatan peninsula. Residents and workers in Cancun’s city center, ​unaccustomed to strong quakes, evacuated buildings. Emergency protocols were activated in ​Mexico’s Yucatan ⁠and Quintana Roo states, but there were not yet reports of damage, the state’s governors both said on social media. No tsunami warning or watch was issued after the earthquake, according ⁠to ​the U.S. National Weather Service.

2
Pathivunews.com️ 2026-06-09T04:14:23+0000

சுரேஷ் சலே விவகாரம் சிஐடிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு..! மேலும் வாசிக்க 👇 https://pathivunews.com/suresh-saley-cid-summons/

1
Pathivunews.com️ 2026-06-09T04:13:23+0000

Former Deputy Minister Sarana Gunawardena appears before Colombo HC Former Deputy Minister Sarana Gunawardena has appeared before the Colombo High Court as the defendant in four cases filed by the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) over alleged corruption charges. The verdicts in the respective cases against the former Deputy Minister are scheduled to be delivered today, said Ada Derana reporter. The four cases were filed by CIABOC, alleging that Gunawardena caused a financial loss to the government during his tenure as Chairman of the National Lotteries Board in 2006 by procuring vehicles for the Board on a rental basis.

2
Pathivunews.com️ 2026-06-09T04:12:10+0000

ඉරානයට සහ කියුබාවට ප්‍රබල භූ කම්පන දෙකක් ඉරානයේ සහ කියුබාවේ ප්‍රබල භූ කම්පන දෙකක් සිදුව තිබේ. විදෙස් මාධ්‍ය වාර්තා කළේ ඉරානයේ දකුණු හෝමොස්ගන් පළාතේ සර්ගාස් හි කිලෝමීටර් 22ක් ගැඹුරින් රික්ටර් මාපක 5ක ප්‍රභලත්වයකින් භූ කම්පනයක් සිදුව ඇති බවය. එමෙන්ම කියුබාවේ වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්‍රදේශයේ කිලෝමීටර් 10ක් ගැඹුරින් රික්ටර් මාපාංක 6.1ක ප්‍රභලත්වයකින් යුත් භූ කම්පනයක් ද සිදුව ඇත. භූ කම්පනයෙන් දේපොළ හෝ ජීවිත හානි කිසිවක් සිදුව නොමැති බව විදෙස් මාධ්‍ය සඳහන් කළේය.

2
Pathivunews.com️ 2026-06-09T04:11:20+0000

චීන ජනපතිට කිම් ජොන්ගෙන් විශේෂ රාත්‍රී භෝජන සංග්‍රහයක් සහ උණුසුම් පිළිගැනීමක් ජාත්‍යන්තර තත්ත්වය කෙසේ වෙනස් වුවද, චීනයත් උතුරු කොරියාවත් අතර පොදු යහපත හා පොදු උපායමාර්ගික තත්ත්වයන් ආරක්ෂා කිරීම වෙනස් නොවන බව ජනපති ෂී ජින්පිං මහතා අවධාරණය කරයි. උතුරු කොරියාවේ දෙදින රාජ්‍ය සංචාරයකට එක්ව සිටින චීන ජනපතිවරයා ඊයේ (08) පියොංග්යැංග් අගනුව‍ර දී උතුරු කොරියානු නායක කිම් ජොන් උන් මහතා හමුවෙමින් මේ අදහස් පළ කළේය. කොමියුනිස්ට් පක්ෂ නායකත්වයෙන් යුත් සමාජවාදී රටවල් දෙකක් ලෙසින් චීනයත් උතුරු කොරියාවත් අතර ගැඹුරු සාම්ප්‍රදායික මිත්‍රත්වයක් පවතින බව පෙන්වා දුන් ෂී ජින්පිං මහතා එහිදී කියා සිටියේ, ද්විපාර්ශ්වික සබඳතා රැකගැනීමටත්, කිම් ජොන් උන් මහතාගේ නායකත්වය යටතේ උතුරු කොරියාවේ ක්‍රියාත්මක සමාජවාදී ක්‍රමයට සහාය වීමත් චීනය අඛණ්ඩව සිදුකරනු ඇති බවය. මෙහිදී අදහස් දක්වමින් උතුරු කොරියානු නායකයා පැවසුවේ, වසර 07කට පසු චීන ජනාධිපතිවරයා යළි උතුරු කොරියාවට පැමිණීමත්, විශේෂයෙන් මේ වසරේ පළමු විදේශ සංචාරය සඳහා චීන ජනාධිපතිවරයා උතුරු කොරියාව තෝරාගෙන තිබීමත් තම රටට මහත් ගෞරවයක් බවය. එමෙන්ම නව යුගයේ උතුරු කොරියා- චීන මිත්‍රත්වය ශක්තිමත් කිරීම, උතුරු කොරියාවේ වෙනස් නොවන උපායමාර්ගික තෝරා ගැනීමක් බව ද කිම් ජොන් උන් මහතා එහිදී වැඩිදුරටත් සඳහන් කළේය. මෙම හමුවෙන් අනතුරුව උතුරු කොරියානු නායක කිම් ජොන් උන් මහතා, චීන ජනාධිපති ෂී ජින්පිං මහතා සහ එම ආර්යාව වෙනුවෙන් රාත්‍රී භෝජන සංග්‍රහයක් ද පැවැත්වීය. චීන ජනාධිපති ෂී ජින් පිං මහතා සහ Peng Liyuan ආර්යාව පිළිගනිමින් ඊයේ (08) රාත්‍රියේ පියොංග්යැංග් ක්‍රීඩාංගනයේදී විශේෂ සංස්කෘතික ප්‍රසංගයක් ද පැවැත්විණ. එම අවස්ථාවට ද උතුරු කොරියානු නායකයා සහ එම ආර්යාව එක්විය.

3
Pathivunews.com️ 2026-06-09T04:10:12+0000

மத்திய வங்கிக்கு காணாமல் போன பணம் குறித்து விளக்கமளிக்க காலவகாசம்..! மேலும் வாசிக்க 👇 https://pathivunews.com/missing-funds-explanation/

Pathivunews.com️ 2026-06-09T04:09:58+0000

තරුණයෙකුට සහ පුද්ගලයෙකුට මරු කැඳවූ මාරක අනතුරු දෙකක් ග්‍රෑන්ඩ්පාස් ලූකස් පාර හන්දිය අසලදී සිදු වූ අනතුරකින් තරුණයෙකු ජීවිතක්ෂයට පත්ව ඇත. තොටලඟ හන්දිය දෙස සිට පෑළියගොඩ දෙසට ධාවනය වූ යතුරුපැදියක්, ප්‍රයිමූවර් රථයක ගැටීමෙන් මෙම අනතුර සිදුව තිබේ. අනතුරින් තුවාල ලැබූ පැදිකරු කොළඹ ජාතික රෝහලට ඇතුළත් කිරීමෙන් පසු මියගොස් ඇත. මෙලෙස මියගොස් ඇත්තේ වයස අවුරුදු 21ක් වූ පැළියගොඩ ප්‍රදේශයේ පදිංචිකරුවෙකි. අනතුරට සම්බන්ධ ප්‍රයිමූවර් රථයේ රියැදුරු අත්අඩංගුවට ගෙන ඇති අතර ග්‍රෑන්ඩ්පාස් පොලිසිය විසින් වැඩිදුර විමර්ශන සිදු කරයි. පයාගල, මලේගොඩ දොඩංගොඩ මාර්ගයේ පහල අංගොඩ හන්දිය අසලදී දොඩංගොඩ දෙසට ධාවනය වූ යතුරුපැදියක් ඉදිරියෙන් ගමන්කළ පාපැදියක ගැටී අනතුරක් සිදුව ඇත. අනතුරින් තුවාල ලැබූ පාපැදිකරු හා යතුරුපැදිකරු කළුතර, නාගොඩ රෝහලට ඇතුළත් කිරීමෙන් පසු යතුරුපැදිකරු මියගොස් තිබේ. මෙලෙස මියගොස් ඇත්තේ වයස අවුරුදු 43ක් වූ පයාගල ප්‍රදේශයේ පදිංචිකරුවෙකි. අනතුර සම්බන්ධයෙන් පයාගල පොලිසිය විසින් වැඩිදුර විමර්ශන සිදු කරයි.

1
Pathivunews.com️ 2026-06-09T04:08:43+0000

වෙල්යායක තිබී මළ සිරුරක් සොයා ගැනේ අහංගම, උඩුමුල්ලවත්ත, තිත්තගල්ල ප්‍රදේශයේ වෙල්යායක තිබී පුද්ගල මළ සිරුරක් සොයා ගෙන තිබේ. මෙලෙස මියගොස් ඇත්තේ වයස අවුරුදු 23ක් වූ තිත්තගල්ල ප්‍රදේශයේ පදිංචිකරුවෙකි. අදාළ පුද්ගලයා තම කුඹුරේ වැඩට ගොස් නැවත නිවසට පැමිණෙමින් සිටියදී මෙලෙස සැකකටයුතු ලෙස වෙල්යාය තුළ මියගොස් ඇති බව මූලික විමර්ශනවල දී අනාවරණය වී ඇත. අහංගම පොලීසිය විසින් සිද්ධිය සම්බන්ධයෙන් වැඩිදුර විමර්ශන සිදු කරයි.

1
Pathivunews.com️ 2026-06-09T04:05:49+0000

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை..! மேலும் வாசிக்க 👇 https://pathivunews.com/sri-lanka-wins-series/

Pathivunews.com️ 2026-06-09T03:47:47+0000

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..! மேலும் வாசிக்க 👇 https://pathivunews.com/sl-weather-report-2/

Pathivunews.com️ 2026-06-09T02:45:39+0000

கதிர்காம பாதயாத்திரை 18 ஆம் நாள்..!

6
Pathivunews.com️ 2026-06-08T19:04:58+0000

பாரம்பரிய முறைப்படி ஆனையிறவிலிருந்து மடப் பண்டம் எடுத்துவரப்பட்டது..! வரலாற்றுச் சிறப்பு மிக்க உமையாள்புரம் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, பாரம்பரிய முறைப்படி ஆனையிறவிலிருந்து மடப் பண்டம் எடுத்துவரப்பட்டது. பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, ஆலய மரபுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பாக அமைந்தது.

2
Pathivunews.com️ 2026-06-08T17:58:38+0000

சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய வேட்டைத் திருவிழா..! 08.06.2026 காணொளி நிறைன்சன் ராசேந்திரம்

10
3 Comments
Pathivunews.com️ 2026-06-08T15:20:20+0000

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்..! பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதன் அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று(08.06.2026) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கலைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது, கருத்துச் சுதந்திரத்தையும் கலைஞர்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், சங்கீதனை நிபந்தனையின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். கலைஞர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் தமது கவலையை தெரிவித்தனர். பழைய பேருந்து நிலைய பகுதியில் ஆரம்பமான குறித்த போராட்டம் அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரசந்தி வரை ஊர்வலமாக சென்று மீண்டும் போராட்ட இடத்தை அடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் சந்திரசேகரன் சொன்னால் இனிக்கும் சங்கீதன் சொன்னால் புளிக்குதோ, கலைஞர்களுக்கும் கைவிலங்கோ,பாடுவதும் ஆடுவதும் பயங்கரவாதமா போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

1
Pathivunews.com️ 2026-06-08T15:14:07+0000

வட்டுக்கோட்டை தீர்மானத்தை கோரிய தமிழர்களுக்கு சாதாரண மாகாண சபை அதிகாரத்தை கூட தர மறுக்கிறது அரசாங்கம்..! செ.நிலாந்தன் தெரிவிப்பு வடகிழக்கின் அதி உச்ச அதிகாரமான வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் தமிழ் மக்களுக்கு இன்று சாதாரண மாகாண சபை நிர்வாக அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்கு கூட அரசாங்கம் தயாராக இல்லை. என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட பாடல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- இலங்கையின் வரலாறு மீண்டும் மீண்டும் திருப்ப திரும்ப எழுதப்படுகிறது. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஐம்பதாவது ஆண்டு வரலாற்று நிறைவை வடகிழக்கு தமிழர்கள் நினைவு கூற தயாராகி வரும் நிலையில். ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்ற காரணமாக அத்தனை பிரச்சினைகளும் இன்றும் அப்படியே தான் இருக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். தமிழ் மக்களுக்கான மொழி உரிமை மறுக்கப்பட்டது, நில உரிமை மறுக்கப்பட்டது, கல்வி உரிமை மறுக்கப்பட்டது இதன் காரணமாக தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டும் என்ற நோக்கில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினர் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப் பட்ட பின்னரும் கூட தமிழர்கள் தங்களது உரிமைகளை பெறுவதற்காக ஆயுத ரீதியாகவும், அகிம்சை வழியிலும் பல வருடங்களாக போராடி வருகின்றனர். ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 17 வருடங்களாக அகிம்சை வழியில் மீண்டும் தங்களது உரிமைகளுக்காக தமிழ் மக்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். வரலாற்றை படிக்காத சமூகம் வரலாற்றை படைக்க முடியாது. அந்த வகையில் வடகிழக்கு தமிழர்களின் வரலாற்று ரீதியான அரசியல் போராட்டங்களை நினைவு கூறும் இந்த நிகழ்வின் ஊடாக இளம் சந்ததியினர் தங்களது உரிமைகளை பெற்றுக் கொள்ள எழுச்சியுடன் இருக்கின்றனர். எங்கள் இனம், எங்கள் நிலம், எங்கள் உரிமை என்ற வரலாற்று தத்துவ ரீதியான அரசியல் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசியல் தீர்வவையே கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் கேட்டு போராடி வருகின்றனர். ஆனால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் எப்போதெல்லாம் எழுச்சி கொள்கிறதோ அப்போதெல்லாம் அதனை அடக்கி ஆள்வதற்கு அரசாங்கம் பல்வேறு தந்துரோபாயங்களை கையாண்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது பயங்கரவாத தடைச் சட்டம். அண்மையில் கிளிநொச்சி இளைஞர் ஒருவர் எழுச்சி பாடல் ஒன்றை பாடியதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கவதற்கே இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் கூடுதலாக பயன்படுத்தி உள்ளது. ஆனால் என்னதான் அரசாங்கம் பல்வேறு அடக்குமுறை சட்டங்களை பிரயோகித்து தமிழ் மக்களின் போராட்டங்களை முடக்கினாலும் அவர்கள் இன்று வரை தங்களது உரிமைகளுக்காக தமிழர்கள் போராடிக் கொண்டே உள்ளனர். அந்த வகையில் மட்டக்களப்பில் வெளியிடப் படும் வட்டுக்கோட்டை தீர்மானம் ஐம்பது நினைவு எழுச்சி பாடலும் ஒரு எடுத்துக் காட்டாகும். வடகிழக்கு தமிழர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் ஐம்பதாவது ஆண்டை நினைவு கூற தயாராகும் நிலையில் தமிழ் மக்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எதற்காக வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினார்களோ அந்த காரணிகள் அனைத்தும் இன்றுவரை அப்படியே தான் இருக்கிறது. அதாவது தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆள கூடிய அரசியல் தீர்வை கோரி இன்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு எந்த தீர்வுகளும் கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் அப்படியே உள்ளது. ஒரு சாதாரண மாகாண சபை நிர்வாக அரசியல் உரிமையை கூட வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. இன் நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான உரிமைகள், அரசியல் அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவார்கள். தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் அதிகாரம் கிடைக்கும் வரை தமிழர்களின் அடுத்த சந்ததியினரும் எம்மை விட அதிக எழுச்சியோடு போராடுவார்கள். அதனை நாம் இப்போது கண்ணூடாக காண்கின்றோம். பயங்கரவாத தடைச் சட்டத்தை பிரயோகித்து இளைஞர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்த போதும் அவர்கள் இன்று வரை அகிம்சை வழியில் பல்வேறு வடிவங்களில் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர் என்றார். மட்டக்களப்பு நிருபர்

2
Pathivunews.com️ 2026-06-08T14:31:24+0000

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு..! 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், இப்பரீட்சை செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

2
Pathivunews.com️ 2026-06-08T14:29:26+0000

விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கில் சாட்சியம் பதிவு.! அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மிஞ்சிய வகையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி தலைமையிலான குழுவினர், வழக்கின் சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சி விசாரணை ஜூன் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தனது சட்டபூர்வ வருமானத்தை விட 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை ஈட்டியதன் மூலம் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி, கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2
Pathivunews.com️ 2026-06-08T14:28:05+0000

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை..! மன்னார் நகர் பகுதியில் பொது மக்களின் சுகாதாரத்தை பாதிக்கும் வகையில், சுகாதாரச் சீர்கேடுகள் உடன் இயங்கி வந்த மூன்று பிரபல உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அதிரடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு தொடர்ச்சியாக கிடைக்கபெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய, குறித்த உணவகங்களில் திடீர் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் போது, குறித்த உணவகங்கள் கடுமையான சுகாதாரச் சீர்கேடுகள் உடன் இயங்கி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

2
Pathivunews.com️ 2026-06-08T14:14:04+0000

பலத்த காற்று தொடர்பில் வௌியான எச்சரிக்கை..! நாளை (09.06.2026) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேல் நிலவும் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, 4 மாகாணங்களுக்கும் மேலும் சில பகுதிகளுக்கும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த நிலைமை தாக்கம் செலுத்தியுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவான பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2
Pathivunews.com️ 2026-06-08T14:08:03+0000

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு..! 2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை நடத்தப்படும். முதலாம் பகுதி வினாத்தாளை முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

2

முக்கிய செய்திகள்

jaffna youth canada issue | Pathivu News

கனடாவுக்கு சட்டவிரோத பயணம் ; யாழ் இளைஞர்களை மீட்க முனைப்பு காட்டும் அதிகாரி..!

imf team leaves sri lanka | Pathivu News

IMF பணிக்குழாமினர் இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்..!

district planning committee | Pathivu News

இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழு கூட்டம்..!

suspect arrested antiquities | Pathivu News

தொல்பொருள் மதிப்புடையதாக கருதப்படும் பொருட்களுடன் சந்தேக நபர் கைது..!

meerasahibu abdul majeed | Pathivu News

சேவையால் சரித்திரம் படைத்த சிறந்த ஆளுமை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீராசாஹிபு அப்துல் மஜீட் (SSP)..!

assets and liabilities | Pathivu News

இன்றுடன் நிறைவுறும் சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்..!

pillayan murder case | Pathivu News

பிள்ளையான் கொலை வழக்குகள் தொடர்பில் விளக்கமறியலில்..!

government confidence | Pathivu News

எதிர்க்கட்சிகளால் எந்த வகையிலும் எங்களை பலவீனப்படுத்த முடியாது..!

volleyball final event | Pathivu News

கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் முதன்மை விருந்தினராக சிவஞானம் சிறீதரன் MP அவர்கள் கலந்து சிறப்பித்தார் ….!

final report next week | Pathivu News

மாயமான 2.5 மில்லியன் டொலர்: இறுதி அறிக்கை அடுத்த வாரம்..!

hospital development debate | Pathivu News

ஒரு வைத்தியசாலையின் பெயரை மாற்றுவதால் வைத்தியசாலை அபிவிருத்தி அடையும்..?

annual bus fare | Pathivu News

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தத்தை நாளை முதல் அமுல் படுத்த கோரிக்கை..!

weather alert sl | Pathivu News

இலங்கையில் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை..!

sri lanka silver medal | Pathivu News

சீனாவில் சாதித்த இலங்கையர்கள்; வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை..!

sl revenue drop 2026 | Pathivu News

2026ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் குறையும்..!

sri lanka weather today 6 | Pathivu News

இலங்கையில் இன்றைய வானிலை..!

keppapulavu land issue | Pathivu News

கேப்பாப்புலவில் காணிகளை விடுவிக்காவிடின் வடக்கு ஆளுநர் அலுவலகம் முற்றுகையிடப்படும்..!

human graves ariyalai | Pathivu News

அரியாலையில் 26 மனித புதைகுழிகள் உள்ளன; கண்கண்ட சாட்சியங்களும் உயிருடன் உள்ளனர்..!

pediatric specialist transfer | Pathivu News

யாழ் போதனா வைத்தியசாலையின் சிறுவர் மருத்துவ விசேட வைத்திய நிபுணருக்கு இடமாற்றம்..!

agora mariamman festival | Pathivu News

வரலாற்றுச் சிறப்புமிக்க கோரக்கோயில் ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீ மதிப்பு..!

தற்போதைய செய்தி

jaffna youth canada issue | Pathivu News

கனடாவுக்கு சட்டவிரோத பயணம் ; யாழ் இளைஞர்களை மீட்க முனைப்பு காட்டும் அதிகாரி..!

  • 30/06/2026
imf team leaves sri lanka | Pathivu News

IMF பணிக்குழாமினர் இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்..!

  • 30/06/2026
district planning committee | Pathivu News

இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழு கூட்டம்..!

  • 30/06/2026
suspect arrested antiquities | Pathivu News

தொல்பொருள் மதிப்புடையதாக கருதப்படும் பொருட்களுடன் சந்தேக நபர் கைது..!

  • 30/06/2026
meerasahibu abdul majeed | Pathivu News

சேவையால் சரித்திரம் படைத்த சிறந்த ஆளுமை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீராசாஹிபு அப்துல்

  • 30/06/2026
assets and liabilities | Pathivu News

இன்றுடன் நிறைவுறும் சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்..!

  • 30/06/2026
pillayan murder case | Pathivu News

பிள்ளையான் கொலை வழக்குகள் தொடர்பில் விளக்கமறியலில்..!

  • 30/06/2026
government confidence | Pathivu News

எதிர்க்கட்சிகளால் எந்த வகையிலும் எங்களை பலவீனப்படுத்த முடியாது..!

  • 30/06/2026
volleyball final event | Pathivu News

கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் முதன்மை விருந்தினராக சிவஞானம் சிறீதரன் MP அவர்கள் கலந்து சிறப்பித்தார்

  • 30/06/2026

உள்ளூர் செய்திகள்

உலகம்

canada shooting kills three | Pathivu News

கனடாவில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு..!

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி,...
iran israel peace deal | Pathivu News

ஈரான் போர்: சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டதை அமெரிக்காவும் ஈரானும் உறுதி செய்துள்ளன..!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது என்றும், அதற்கான கையெழுத்திடும்...
thailand royal princess death | Pathivu News

தாய்லாந்து மன்னரின் மூத்த மகள் காலமானார்..!

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோனின் மூத்த மகளான பஜ்ரகிதியாபா நரேந்திரா தெபியாவதி இளவரசி காலமானதாக அந்நாட்டு அரண்மனை இன்று...
global fuel price rise | Pathivu News

உலக சந்தையில் மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை..!

ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத்...
canada ebola action | Pathivu News

எபோலா வைரஸ் பரவல் – கனடா அதிரடி தீர்மானம்..!

எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா...
scotland peace rally | Pathivu News

ஸ்காட்லாந்தில் இடம்பெற்ற அமைதி நடைப்பேரணி..!

மே 18 தமிழின அழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடுமைகளை நினைவுகூரும் முகமாக...
uk tamil remembrance | Pathivu News

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள்..!

தமிழின வரலாற்றின் மிகக் கொடூரமான இனஅழிப்பான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு நாள், மே 18,...
us mosque shooting | Pathivu News

அமெரிக்காவில் பள்ளிவாசல் ஒன்றில் துப்பாக்கிச் சூடு..!

அமெரிக்காவின் சென்டியாகோவிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் அந்நாட்டு நேரப்படி நேற்று (18.05.2026) இரவு 11.53 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்...
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp