உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வீதியில் முளைத்த  மரம்-மருதமுனையில் சம்பவம்..!

  • Mar 31, 2026 - 09:35 AM
  • 0 Comments

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில் இடப்பட்டுள்ள வடிகான் மூடி சேதமடைந்துள்ளமையினால் குறித்த மரம் முளைத்துள்ளது. இது தவிர இரவு நேரத்தில் இவ்வீதி இருளில் மூழ்குவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் உரிய அதிகாரிகள் குறித்த மரத்தை அகற்றி வடிகான் மூடியை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

“இலங்கையில் மின் கட்டண உயர்வு ரத்து செய்தியுடன் மக்கள் மகிழ்ச்சி காணும் காட்சிகள்” உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

2026 முதல் காலாண்டில் மின் கட்டண உயர்வு ரத்து! மக்களுக்கு நிவாரணம்

  • Jan 14, 2026 - 07:43 PM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை 11.57 சதவீதம் அதிகரிக்க கோரிக்கை விடுத்திருந்ததாகவும், எனினும் அந்தக் கோரிக்கையை இக்காலாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான கட்டணத் திருத்த முன்மொழிவை கடந்த ஆண்டு […]

ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

இலங்கை–இந்தியா மின்கம்ப இணைப்பு: எதிர்கால சக்தியின் புதிய திசை

  • Nov 2, 2025 - 11:13 AM
  • 0 Comments

இலங்கை தற்போது மின்சாரத் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவுடனான மின்கம்ப இணைப்பு திட்டம், கடந்த வாரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. இது வெறும் தொழில்நுட்பத் திட்டமல்ல; இரு நாடுகளின் உறவையும், ஆற்றல் பாதுகாப்பையும், பொருளாதார நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் முக்கிய முயற்சி ஆகும். இந்த இணைப்பு நிறைவேற்றப்பட்டால், இந்திய மின் வலையமைப்புடன் இலங்கை நேரடியாக இணைக்கப்படும். அதாவது, ஒரு நாடு மின் பற்றாக்குறையில் சிக்கினாலும், மற்றொரு நாட்டிலிருந்து உடனடி மின் வழங்கல் சாத்தியமாகும். […]

இலங்கை–இந்தியா மின்கம்ப இணைப்பு: எதிர்கால சக்தியின் புதிய திசை

  • Nov 2, 2025 - 09:09 AM
  • 0 Comments

இலங்கை தற்போது மின்சாரத் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவுடனான மின்கம்ப இணைப்பு திட்டம், கடந்த வாரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. இது வெறும் தொழில்நுட்பத் திட்டமல்ல; இரு நாடுகளின் உறவையும், ஆற்றல் பாதுகாப்பையும், பொருளாதார நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் முக்கிய முயற்சி ஆகும். இந்த இணைப்பு நிறைவேற்றப்பட்டால், இந்திய மின் வலையமைப்புடன் இலங்கை நேரடியாக இணைக்கப்படும். அதாவது, ஒரு நாடு மின் பற்றாக்குறையில் சிக்கினாலும், மற்றொரு நாட்டிலிருந்து உடனடி மின் வழங்கல் சாத்தியமாகும். […]

உலகம் செய்திகள்

அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் 50 வீதம் வரி விதிப்பு

  • May 26, 2025 - 05:17 PM
  • 0 Comments

உலக நாடுகள் மீது வரிவிதிப்பை அமல்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய கவனம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விழுந்தது. ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 1 முதல் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்த வரிவித்தபை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் […]

இந்தியா செய்திகள்

தமிழக மீனவர் பிரச்சினை 1974 ம் ஆண்டிருந்து தொடங்கியது என இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்

  • Mar 28, 2025 - 11:05 AM
  • 0 Comments

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில்இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவது குறித்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ‘இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளன. 1996-ஆம் ஆண்டின் மீன்வள மற்றும் நீர்வாழ் வளச் சட்டம் மற்றும் 1979-ஆம் ஆண்டின் வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் மீன்வள ஒழுங்கு […]

செய்திகள்

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • Feb 27, 2025 - 10:53 AM
  • 0 Comments

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அரவிந்த ஸ்ரீநாத நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத உத்தியோகபூர்வமாக நேற்று (26-02-2025) கடமைகளைப் பொறுப்பேற்றார். களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப்பிரிவில் பட்டம் பெற்ற இவர் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் கற்றுள்ளதுடன் பல தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

செய்திகள்

தீ விபத்தில் சிக்கிய மன்னார் யுவதி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்தார்

  • Feb 7, 2025 - 05:51 AM
  • 0 Comments

தீ விபத்தில் சிக்கிய யுவதியொருவர் கடந்த புதன்கிழமை (05-02-2025 ) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி கடந்த 12.01.2025 அன்று குளிர்காய்வதற்காக அடுப்பினை பற்றவைத்துள்ளார். இதன்போது அவரது ஆடையில் தீப்பற்றி தீவிபத்துக்கு உள்ளாகினார். இந்நிலையில் அன்றையதினமே பண்டிவிரிச்சான் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன்பின்னர் 13ஆம் […]

செய்திகள்

கருணா அம்மான் பிள்ளையானை போடுவதற்கு திட்டமிட்டதாக இராணுவபுலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஸ்சாலே தெரிவித்துள்ளார்

  • Feb 6, 2025 - 07:05 PM
  • 0 Comments

கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றிய சுரேஸ் சாலே பிள்ளையானிடம் தெரிவித்தார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது 2007 நவம்பர் 2ம் திகதி போலிகடவுச்சீட்டில் பிரித்தானியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த நாட்டில்கைதுசெய்யப்பட்டார். இலங்கையின் தேசிய புலனாய்வு சேவையே இந்த கடவுச்சீட்டை வழங்கியிருந்தது. கருணா அம்மானை அகற்றிவிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் […]

செய்திகள்

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றொரு பொலிஸ் உத்தியோகஸத்தர் கைது

  • Jan 22, 2025 - 02:16 PM
  • 0 Comments

கொழும்பில் வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த 18 ஆம் திகதி திகதி வெள்ளவத்தையில் உள்ள தனியார் வைத்தியசாலை விடுதிக்கு வெளியே பெண்ணொருவருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார். கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 31,500 ரூபாய் பணம் மற்றும் பிற பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த கடத்தல்காரர்கள் வெலிக்கடைப் பகுதியில் பெண்ணை கைவிட்டு சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் […]