உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

  • May 22, 2026 - 11:44 AM
  • 0 Comments

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்று (22.05.2026) காலை 9 மணிக்கு வௌியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அனர்த்தங்கள் காரணமாக […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொக்கடிச்சோலை அம்பிளாந்துறை வீதி அபிவிருத்தித் திட்டப் பணிகள் ஆரம்பம்..!

  • May 22, 2026 - 11:40 AM
  • 0 Comments

மட்டக்களப்பு – கொக்கடிச்சோலை – அம்பிளாந்துறை வீதி அபிவிருத்திப் பணிகள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (21.05.2026) உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்துவைக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண நிதியத்தின் (EPC) கீழ் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கொக்கட்டிச்சோலை – அம்பிளாந்துறை வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது, மேலும் இந்த வீதியின் நீளம் 1500 மீட்டர் ஆகும். 15 மில்லியன் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது..!

  • May 22, 2026 - 11:31 AM
  • 0 Comments

சமூக சேவைகள் திணைக்களமும் (மத்திய) முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி நேற்றைய தினம்(21) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து சமூக சேவை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் முன்நூற்றி ஐம்பது பேர் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் உடல் உள ஆரோக்கியத்தைப் பேணிடவும் திறமையானவர்களை இனங்கண்டு மாகாண மற்றும் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

களனி கங்கையை அருகில் வாழ்வோருக்கு எச்சரிக்கை..!

  • May 22, 2026 - 11:20 AM
  • 0 Comments

களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்காலப்பகுதிக்குள் ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, தெஹிஓவிட்ட, எஹலியகொட, எட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளைச் சூழவுள்ள இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. களனி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் தற்போது 300 மில்லிமீட்டரை நெருங்கிய கணிசமான […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

IMF இன் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்..!

  • May 22, 2026 - 11:16 AM
  • 0 Comments

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை எதிர்வரும் புதன்கிழமை (27.05.2026) பரிசீலிக்கவுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜியோர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் இலங்கை ஸ்திரமான பொருளாதார நிலையை மீட்டெடுப்பதிலும், கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் கூறினார். இந்த […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வயோதிப தம்பதியினர் படுகொலை..!

  • May 22, 2026 - 11:11 AM
  • 0 Comments

ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த வயோதிப தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதுடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இந்த வர்த்தக நிலையத்தில் வியாபாரம் செய்து வந்த நிலையில், தற்போது கடையை […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஓந்தாச்சிமடம் கோட்டைக்கல்லாறு வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்..!

  • May 22, 2026 - 10:46 AM
  • 0 Comments

கிழக்கு மாகாண மக்களின் அன்றாடப் போக்குவரத்தை எளிதாக்குவதையும், அப்பகுதியின் அபிவிருத்தியை மேலும் விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஓந்தாச்சிமடம் – கோட்டைக்கல்லாறு வீதி அபிவிருத்தித் திட்டப் பணிகள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நேற்று (21.05.2026) ஆரம்பித்துவைக்கப்பட்டது. மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக ரூ. 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓந்தாச்சிமடம் – கோட்டைக்கல்லாறு வீதியின் சீரமைப்பு மற்றும் Asphalt அடுக்குப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அபிவிருத்தி […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 22, 2026 - 10:27 AM
  • 0 Comments

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது. நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22) அதிகாலை 5.30 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கை தயார்..!

  • May 22, 2026 - 10:24 AM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளய் – புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்துள்ளார். பாராளுமன்ற […]

விளம்பரம்

யாழ், சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவிஸ் கிளையினர் நடாத்தும் பிரமாண்டமான இன்னிசை விழா..!

  • May 22, 2026 - 09:24 AM
  • 0 Comments

வரும் 06.06.2026 அன்று மாலை 2 மணியிலிருந்து Solothurn, மாநிலத்தில் 3380 Wangen an der aare, இடத்திலுள்ள SalzHaus மண்டபத்தில் இடம்பெறும், இதில் பிரபல தாயக பாடகர் கோகுலன், இவர் புகழ்பெற்ற புரட்சி பாடகர் சாந்தனின் மகன், சுவிஸ் புகழ் மகேஷ் மாஸ்டரின் நெறியாள்கையில் அவரது மாணவர்களின் இசை வழங்கலில் உங்களை மகிழ்விக்க உள்ளார். எமது கல்லூரியின் பெருமைக்குரிய பழைய மாணவரும், உலக புகழ் பெற்ற விஞ்ஞானியும், டாக்டர் திரு சிதம்பரநாதன் சபேசன் அவர்கள் பிரதம […]