உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!

  • Apr 29, 2026 - 01:29 PM
  • 0 Comments

வவுனியா தோணிக்கள் சேக்கிளார் வீதியை சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது   காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/980316844562655

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இல்மனைட் அகழ்தல் வேலைத்திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர்..!

  • Apr 28, 2026 - 05:13 PM
  • 0 Comments

இன்றைய தினம் திருக்கோவில் பிரதேச சபைக்கு வருகை தந்த capital Metals நிறுவனத்தின் அவுஸ்திரேலியா பிராந்திய முகாமையாளர் அவர்களினாலும் நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகளினாலும் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்தல் வேலைத்திட்டத்தின் அனுமதிக்கான கோரிக்கையினை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளரிடம் முன்வைத்திருந்தார்கள் . இதற்கு அமைவாக பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் அவர்கள் குறித்த நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளரிடம் எங்களுடைய பிரதேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயற்பாட்டிற்கும் பிரதேச சபையினால் ஆதரவு தெரிவிக்கப்பட மாட்டாது எனவும் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் கடந்த பங்குனி மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு..!

  • Apr 24, 2026 - 10:46 AM
  • 0 Comments

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவிய போதிலும், கடந்த பங்குனி மாதத்தில் 1,467 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க நேற்று (23.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தத் விடயத்தைக் குறிப்பிட்டார். அதன்படி, பொருட்களின் ஏற்றுமதி மூலம் 1,180 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சேவை ஏற்றுமதி மூலம் 286 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளன. இதன் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தம்பலகாமத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு விழா..!

  • Apr 23, 2026 - 02:21 PM
  • 0 Comments

தம்பலகாமத்தில் மூவின மக்களும் கலந்து கொண்ட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழா பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் தலைமையில் நேற்று (22.04.2026) புதன்கிழமை இடம்பெற்றது. இதில் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில் பல பாரம்பரிய முறையிலான போட்டிகளும் இடம்பெற்றதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிருபர் வி.ரி.சகாதேவராஜா

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குடு சலிந்துவின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது..!

  • Apr 21, 2026 - 04:24 PM
  • 0 Comments

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான பாணதுறை குடு சலிந்து என்ற மல்ஷித சலிந்துவின் நெருங்கிய உதவியாளர்கள் இருவர் பாயாகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் பாயாகல பகுதியில் இரகசியமாகத் தங்கியிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வலானை மத்திய ஊழல் ஒழிப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (21.04.2026) அதிகாலை பாயாகல நிர்மலவத்த மற்றும் கும்புகொட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு 16000 லீட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் பவுசர் வழங்கி வைப்பு..!

  • Apr 21, 2026 - 01:14 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடிநீர் வழங்குவதற்கான பவுசர் ஒன்றினை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (21.04.2026) வழங்கி வைத்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியினால் அதிகளவு பாதிக்கும் பிரதேச செயலாளர் பிரில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடி நீர் விரியோகத்திற்கான 16000 லீட்டர் கொள்ளவு கொண்ட பவுசர் அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பு விமான நிலையத்தில் இந்தியரின் மோசமான செயல்..!

  • Apr 21, 2026 - 01:08 PM
  • 0 Comments

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ (Kush) போதைப்பொருளுடன் வெளிநாட்டு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய இந்தியப் பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் சிவதீட்சை வழங்கும் நிகழ்வு..!

  • Apr 21, 2026 - 12:11 PM
  • 0 Comments

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் சிவதீட்சை வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமநாத லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 22.04.2026 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் இடம்பெறவுள்ளது. அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் உப தலைவர் ​சைவப் புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், தீட்சா குருவாக சிவஸ்ரீ மு. கு. சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வானது சைவ சமயப் பிரசாரச் செயலாளர் சைவப் புலவர் வே. மகேஸ்வரரத்தினம் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள்..!

  • Apr 21, 2026 - 10:23 AM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21.04.2026) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இதன்படி, தேவாலயங்களில் மணி ஒலி எழுப்புதல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், மெழுகுவர்த்தி அல்லது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

போதைப்பொருள் பாவனை சமூகத்தின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறி வருகிறது..!பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்

  • Apr 21, 2026 - 09:36 AM
  • 0 Comments

நிந்தவூர் பிரதேசத்தில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்மபடுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை(19) இரவு நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கருத்து தெரிவிக்கையில், அண்மைக்காலமாக இப்பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, இளவயது மரணங்கள், வீதி விபத்துக்கள் போன்ற சமூக பிரச்சினைகள் சமூகத்தின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இவ்வாறான சவால்களை தனிப்பட்ட முயற்சிகளால் சமாளிக்க முடியாது, மத நிறுவனங்கள், சமூக அமைப்புகள், […]