ஒரு சமூகத்தின் எதிர்கால சந்ததியை உருவாக்காமல் தடுக்கும் நோக்குடன் அரங்கேற்றப்பட்டதா செம்மணி புதைகுழி..???
ஒரு சமூகத்தின் எதிர்காலச் சந்ததியை உருவாக்காமல் தடுக்கும் நோக்குடன் அரங்கேற்றப்பட்ட குற்றங்களா செம்மணி புதைகுழி? என இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக இயற்கையின் நண்பர்கள் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்; அரியாலை செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பேரதிர்ச்சி தரும் உண்மைகள் தற்போது சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. இப்பகுதியில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மற்றும் […]









