கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்நகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
நேற்று (15.04.2026) மாலை சுமார் 4.00 மணியளவில், கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அம்பல்நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை சோதனையிட்டதில் அவரிடமிருந்து ‘ஐஸ்’ (Crystal Meth) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பொருட்கள்:
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 03 கிராம் 100 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை:
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவரை இன்றைய தினம் (16.04.2026) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிருபர்
பூ.லின்ரன்
What’s your Reaction?
