குறித்த நிகழ்வானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 18.06.2026 அன்று நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது…
இதன் பிரதேச செயலாளர் திருமதி S . ரகுலநாயகி தலைமையில் பிரதேசசெயலாக முன்றலில் நடைப்பெற்றது.
நாவிதன்வெளி ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாக கணக்காளரும் உகனை பிரதேச செயலக பதில் கணக்காளருமாகிய திரு .கமறுத்தீன் றிஸ்வி யஹ்சர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு . அலியார் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, நாவிதன்வெளி இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான நவாஸ் ,ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இவ்வுதவி, அமைப்பின் சமூக சேவை மற்றும் மகளிர் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக அமையும் என ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


