செய்திகள்

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய முனையும் கஜேந்திரகுமார்

  • Jan 3, 2025 - 07:31 AM
  • 0 Comments

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்வு திட்டம் குறித்து பேசுவதற்குரிய திகதியை முடிவு செய்யவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது, குறைந்தபட்சம் அவ்விடயத்தில் மாத்திரமேனும் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் […]

செய்திகள்

கடவுச்சீட்டு நகல்களைப் பெற விலை மனு கோர அரசிடம் நிதியில்லை.

  • Jan 2, 2025 - 02:23 PM
  • 0 Comments

நாட்டில் கடவுசீட்டை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க அரசின் போது தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு நகல்கள் ஆண்டின் முதல் பாதிக்கு மட்டுமே போதிய கையிருப்பு இருப்பதாகவும், புதிய கடவுச்சீட்டு நகல்களைப் பெறுவதற்கு விலை மனு கோருவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லாமல் இருப்பதும் கடவுச்சீட்டு நெருக்கடி மேலும் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர்

யாழில் புதிய அரசாங்கத்திலும் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு

  • Dec 31, 2024 - 10:23 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழ்ந்த திருகோணமலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டும் இதனை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தென்மராட்சி பகுதிகளில் உள்ள தனியார் காணிகளிலும் அரச காணிகளிலும் சுண்ணக்கல் உள்ளிட்ட கனிமங்கள் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுத்து செல்லப்படுகிறது. தென்மராட்சியில் குறிப்பாக மந்துவில், வேம்பிராய் மண், சுண்ணக்கல், போன்றவற்றை அகழ்ந்து விற்பனை செய்யப்படுகின்றது யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர், சுண்ணக்கற்களை […]

செய்திகள்

தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் தெரிவு

  • Dec 28, 2024 - 06:11 PM
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (28) கூடியது இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தது. இது தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் இருந்தபோதும் 18 உறுப்பினர்கள் கையொப்பமிடப்பட்ட ஆவணம் ஒன்று சபைக்கு கையளிக்கப்பட்டது. […]

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் பாவனை அதிகரித்துள்ளதா?

  • Dec 27, 2024 - 10:45 PM
  • 0 Comments

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் (27) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வைத்து 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள்

வவுணதீவு,சிப்பிமடு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

  • Dec 27, 2024 - 03:05 AM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. வவுணதீவு,காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை காலை வீட்டிலிருந்து சென்றவர் இதுவரையில் வீடு திரும்பாமையினால் உறவினர்கள் தேடியுள்ள நிலையில் சடலமாக குறித்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். குறித்த பகுதிக்கு வந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் […]

விளையாட்டு

வவுனியா மாணவன் வென்றார் வெள்ளி பதக்கம்

  • Dec 26, 2024 - 10:26 AM
  • 0 Comments

இளையோருக்கான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் வு.தரனிதரன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் கடந்த 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இளையோருக்கான குத்துச்சண்டை போட்டி கண்டியில் நடைபெற்றது. இதன்போது 69 – 71 மப எடைப்பிரிவில் போட்டியிட்ட தரனிதரன் இறுதிப்போட்டியில் கண்டி சென் சில்வஸ்ரார்ஸ் கல்லூரி மாணவனை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தினைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்

உள்ளூர் செய்திகள்

மக்கள் தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் – வடக்கு ஆளுநர்!

  • Dec 26, 2024 - 01:31 AM
  • 0 Comments

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு தன்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளதாக என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும்  வயாவியானில் […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)25.12.2024

  • Dec 26, 2024 - 12:26 AM
  • 0 Comments

இலங்கையுடனான உறவுக்க மிகுந்த ஆவல்- சீனா அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியை பயனபடுத்தி நிதி மோசடி முறைப்பாடு ஜோசப் பரராஜசிங்கம் எம்பியின் 19ஆண்டு ஆவது நினைவுநாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது சீனக் கப்பலில் சிகிச்சை பெற்றவர்களை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி பார்வையிட்டார் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் https://youtu.be/W4XUO0UJt3k

செய்திகள்

ஜோசப் பரராஜசிங்கம் எம்பியின் 19ஆண்டு ஆவது நினைவுநாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது

  • Dec 25, 2024 - 09:40 PM
  • 0 Comments

.மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன் சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற […]