கொழும்பில் அண்மையில் நடைபெற்ற திருமண வரவேற்பு வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தனியாக கூடி பேசிய சம்பவம் கொழும்பு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருமண வரவேற்பு வைபவத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர். இந்நிலையில் கோட்டாபய, ரணில் மற்றும் நாமல் ஆகியோர் சம்பாஷணை செய்துக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அவர்கள் கோட்டபாய, ரணில் , நாமல் மூவரும் என்ன திட்டத்தை வகுத்தனர் என்பது தொடர்பிலான கேள்விகளும் எழும்பியுள்ளன.
What’s your Reaction?

