மட்டக்களப்பு கல்லடி – உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரிச் சாதனை மாணவிகள் பாராட்டிக் கௌரவிப்பு!
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2025 (2026) நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (22) கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் கல்லடி உப்போடை பிரதான வீதியிலுள்ள பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க அதிபர், பிரதி அதிபர், உபஅதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அதிபரால் பாடசாலைக் கொடியேற்றப்பட்டு, பிரதான மண்டபத்தில் அதிபர் […]









