செம்மணி சித்துப்பாத்தியில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரிய அமைதிவழி போராட்டம்..!
இன்றைய தினம்(30.07.2026) அரியாலை புனித யூதாததேய சுருபம் முன்பாக இடம்பெற்றது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/37308276935482670
இன்றைய தினம்(30.07.2026) அரியாலை புனித யூதாததேய சுருபம் முன்பாக இடம்பெற்றது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/37308276935482670
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இவ்வருட ஆரம்பத்தில் 10நிமிடங்களில் கிடைத்த பல் மருத்துவசேவை தற்போது 20தினங்கள் தள்ளிப்போவது ஏன்? அன்று காலை(22/07/2026) 10 மணி இருக்கும். சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பற் சிகிச்சை பிரிவு வழமைக்கு மாறாக அமைதியாகக் காட்சிளித்தது. பொதுவாக, அங்கு சென்றால் குறைந்தது 25-30 பேராவது வரிசையில் காத்திருப்பார்கள். ஆனால், அன்று அங்கு இருந்தது வெறுமனே 5 அல்லது 6 பேர் மட்டுமே! அவர்களிலும் சிலர் சிறுவர்களாக இருந்தமையால் அவர்களை அழைத்து வந்த பெற்றோருமாகவே இருந்தனர். […]
2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 84,000-ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 84,091 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது
குரு பூர்ணிமா தினம் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலில் மிகச் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. ஆன்மீக வாழ்வில் உயர்வினை நல்கும் “குரு பூர்ணிமா” நிகழ்வானது மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் மஹராஜ் தலைமையில் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் உள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோவிலில் நேற்றைய தினம் (29.07.2026) திகதி மிகச் சிறப்பாக இடம்பெற்றது. காலை 07.00 மணி முதல் விசேட நைவேத்தியம் மற்றும் அர்ச்சனை, பஜனை, குரு பூர்ணிமா தின உரைகள், இல்ல மாணவர்களின் […]
தற்போதைய சமூகத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளதன் காரணமாக குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கின்றார். திறந்த சந்தைப் பொருளாதாரம் இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு சமூகத்திற்குள் நுகர்வுவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் மக்கள் மத்தியில் செயற்கையான ஆசைகளை உருவாக்கி பணம் சம்பாதிப்பதுவே இன்று சமூகத்தை இயக்கும் பிரதான காரணியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சீதுவை பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் […]
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 30 ஆம் திகதி இன்று வெகுவிமர்சையாக நிறைவு பெற்றது. கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பக்தர்களால் “சின்னக் கதிர்காமம்” எனப் போற்றி வழிபடப்படுவதுமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 09.07.2026 திகதி திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று இன்று காலை தீர்த்தோற்சவத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை வேளையில் மூல மூர்த்திக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு, சுண்னம் இடித்ததைத் தொடர்ந்து, […]
தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர் போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது. குறித்த உப பொலிஸ் பரிசோதகர் 26 வயதுடையவர் என்பதுடன், சந்தேகநபரைக் […]
கிளாஸ்கோவில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இறுதிப் போட்டியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு பரிதி வட்டத்தை எறிந்த பண்டார, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சர்வதேச அரங்கில் சிறப்பானதொரு திறமையை வெளிப்படுத்தியுள்ளதுடன் இது அவரது தனிப்பட்ட சிறந்த பதிவாகவும் அமைந்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், […]
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது 221 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கடற்றொழில்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1035526555928626