அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்..!
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கமும் சாதகமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக அதன் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், […]









