கோட்டாபயவை காப்பாற்றியதாக சொல்லி ரணிலை டென்சனாக்கி கோவப்படுத்திய அல்ஜசீரா தொலைக்காட்சி உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கோட்டாபயவை காப்பாற்றியதாக சொல்லி ரணிலை டென்சனாக்கி கோவப்படுத்திய அல்ஜசீரா தொலைக்காட்சி

  • Mar 6, 2025 - 09:11 AM
  • 0 Comments

அல்ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக எச்சரித்தார். அல்ஜசீராவின் இன்று ஒளிபரப்பாகவுள்ள ஹெட் டு ஹெட் பேட்டியில் கோத்தாபய ராஜபக்சவை தான் பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டை ரணில்விக்கிரமசிங்க மறுத்துள்ளார். பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனது அரசாங்கம் நம்பகதன்மை மிக்க விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து […]

தமிழர் விவகாரம் தொடர்பில் ஐநாவின் பொறிமுறைகளை அநுர அரசாங்கம் நிராகரித்துள்ளது - உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழர் விவகாரம் தொடர்பில் ஐநாவின் பொறிமுறைகளை அநுர அரசாங்கம் நிராகரித்துள்ளது – எம்.ஏ.சுமந்திரன்

  • Mar 6, 2025 - 08:53 AM
  • 0 Comments

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருப்பதானது, கடந்தகால மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையிலேயே அவர்கள் செயற்படுவதையே காண்பிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று (04-03-2025) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் […]

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த 41 வயதுடைய குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த 41 வயதுடைய குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு

  • Mar 5, 2025 - 01:30 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மருதடி வீதியில் உள்ள வீட்டொன்றில் இருந்தே 41 வயதுடைய வசந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக தனித்து வீட்டில் வசித்து வந்த நிலையிலையே, குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பெற்றோரின் கவனயீனத்தால் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழப்பு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் பெற்றோரின் கவனயீனத்தால் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழப்பு

  • Mar 5, 2025 - 01:05 PM
  • 0 Comments

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் நேற்று (04-03-2025) மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இளையயோருக்கான தொழில் சந்தை நடைபெறுகின்றது உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா மாவட்ட செயலகத்தில் இளையயோருக்கான தொழில் சந்தை நடைபெறுகின்றது

  • Mar 5, 2025 - 12:58 PM
  • 0 Comments

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் தொழில் சந்தை இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலாளர் சரத் சந்திர, உதவி மாவட்ட செயலாளர் சாபர்ஜா, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) நா.கமலதாசன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்சனா குமார ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தனர். இத்தொழில் சந்தையில் 30க்கு மேற்பட்ட நிறுவனங்கள் வருகை தந்திருந்ததுடன், […]

பாதாள உலக குழு தலைவரான 'மிதிகம ருவனுக்கு' விளக்கமறியல் நீடிப்பு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாதாள உலக குழு தலைவரான ‘மிதிகம ருவனுக்கு’ விளக்கமறியல் நீடிப்பு

  • Mar 5, 2025 - 12:47 PM
  • 0 Comments

பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான ‘மிதிகம ருவன்’ என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுல் லங்காபுர இன்று உத்தரவிட்டுள்ளார். ‘மிதிகம ருவன்’ என்பவர் இன்றைய தினம் ஸ்கைப் காணொளி அழைப்பு ஊடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘மிதிகம ருவன்’ என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 79 வயதுடைய தாயொருவர் உயிரிழந்துள்ளார்

  • Mar 5, 2025 - 11:18 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 79 வயதுடைய வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வயோதிப பெண், கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவி தொகை பெறுவதற்காக கடந்த மாதம் 17ம் திகதி சென்றுள்ளார். உதவி தொகை பெற்ற பின் நடந்து வீடு திரும்பி கொண்டிருந்த வேளை பெண்ணொருவர், […]

அமெரிக்கா கனடா மீது விதித்துள்ள வர்த்தக போருக்கு பதில் வர்த்தக போரினை கனடாவும் தொடுத்துள்ளது உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்கா கனடா மீது விதித்துள்ள வர்த்தக போருக்கு பதில் வர்த்தக போரினை கனடாவும் தொடுத்துள்ளது

  • Mar 5, 2025 - 10:27 AM
  • 0 Comments

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கும் அமெரிக்காவை எதிர்த்து போட்டியிடப்போவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா மீதான வரி விதிப்பு நடவடிக்கையை ‘வர்த்தக போர்’ என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ இதன் மூலம் அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கனேடியர்கள் நியாயம் மற்றும் கண்ணியமிக்கவர்கள் என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ சொந்த நாட்டின் நல்லிணக்கம் ஆபத்தில் இருக்கும் போது சண்டையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்து இருக்கிறார். ஜனாதிபதி […]

தமிழ் மக்களின் விடயத்தில் அநுர அரசாங்கத்திற்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை- ஜோசப் ஸ்டாலின் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ் மக்களின் விடயத்தில் அநுர அரசாங்கத்திற்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை- ஜோசப் ஸ்டாலின்

  • Mar 5, 2025 - 09:49 AM
  • 0 Comments

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசுகளைப் போன்று அனுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். வட மராட்சிக்கு நேற்று (04-03-2025) விஜயம் மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் […]

நீதிமன்ற கொலைக்கு உதவிய இஷாரா செவ்வந்தி இந்தியா சென்றுள்ளார் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நீதிமன்ற கொலை சந்தேக நபரான செவ்வந்தி பற்றி தகவல் தருவோருக்கு 12 இலட்சம் சன்மானம்

  • Mar 5, 2025 - 09:34 AM
  • 0 Comments

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பெண் சந்தேகநபர் தலை மறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கு உண்மையான தகவல்களை பொதுமக்களை வழங்குமாறு கோரி பொலிஸ் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp