உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் பட்டப்பகலில் வீடுடைத்து 6 இலடசம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை

  • Mar 13, 2025 - 07:05 PM
  • 0 Comments

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று (12-03-2025) கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினை உடைத்து 6,10,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 25.02.2025 அன்று இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்ட்டிருந்தது இந்நிலையில் நேற்று (12-03-2025) குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபரை மட்டக்களப்பில் வைத்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய […]

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

  • Mar 9, 2025 - 12:56 AM
  • 0 Comments

திருகோணமலையை பிறப்பிடமாகவும், யாழ் தொல்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராசா அவர்கள் நேற்று (08.03.2025) இறையடி சேர்ந்தார்.   அன்னார் காலஞ்சென்ற கந்தையா, தங்கலட்சுமி தம்பதியின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சந்திராவதியின் அன்பு மருமகனும், பத்மாவின் பாசமிகு கணவரும், பவதாரணியின் பாசமிகு தந்தையும், சிவரூபனின் பாசமிகு மாமனாரும், ஷhம்ப்ரீத்தியின் பாசமிகு தாத்தாவும், காலஞ்சென்ற மகேந்திரன், இராசலட்சுமியின் அன்பு சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.03.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் யாழ் தொல்புரத்தில் அமைந்துள்ள […]

பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக மதனவாசன் நியமனம் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக மதனவாசன் நியமனம்

  • Mar 6, 2025 - 11:00 AM
  • 0 Comments

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப. மதனவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ மதனவாசனுக்கு நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்துள்ளார்.

கிழக்கில் அடிப்படைவாதம்; தோற்றம் பெற்றுள்ளதாக கூறி இஸ்லாமியர்களை முடக்க முயற்சி நடக்கின்றது- நிசாம் காரியப்பர்

  • Mar 6, 2025 - 10:43 AM
  • 0 Comments

பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம். இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று (05-03-2025) இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்… கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீயசக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் […]

செல்வம் அடைக்கலநான் எம்பியின் கண்டுபிடிப்பு. உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செல்வம் அடைக்கலநான் எம்பியின் புதிய கண்டுபிடிப்பு.

  • Mar 6, 2025 - 10:36 AM
  • 0 Comments

மீனவர் பிரச்சினையை வைத்துக்கொண்டு தமக்கும் இந்தியாவுக்கும் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த விடயத்தில் சீனா மூக்கை நுழைப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (05-03-2025) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மீனவர்களுடன் நாங்கள் பேசும் போது, இந்திய ரோலர் […]

பல மொழிகளை ஊக்குவிக்கப்போவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் இந்தியா

3 மொழிகளை மட்டுமல்ல பல மொழிகளை ஊக்குவிக்கப்போவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்

  • Mar 6, 2025 - 09:52 AM
  • 0 Comments

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றும் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க இயலாது என்றும், மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை, இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மும்மொழிக் கொள்கை விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘மொழி என்பது தகவல் தொடர்புக்கு மட்டுமே… உலகளவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒளிர்வதை அனைவரும் அறிவீர்கள்… அறிவு வேறு, மொழி வேறு. ஒவ்வொரு […]

முத்தத்தில் கின்னஸ் சாதனை படைத்த தம்பதி உலகம் முக்கிய செய்திகள் வினோத உலகம்

முத்தத்தில் கின்னஸ் சாதனை படைத்த தம்பதி விவாகரத்து செய்துள்ளனர்

  • Mar 6, 2025 - 09:41 AM
  • 0 Comments

தாய்லாந்தை சேர்ந்த எக்கச்சாய்- டிரமாராட் தம்பதியினர் கடந்த 2013-ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மிக நீண்ட முத்தத்திற்கான கின்னஸ் சாதனையை படைத்திருந்தனர். இந்த தம்பதி மொத்தம் 58 மணிநேரம் 35 நிமிடங்கள், 58 வினாடிகள் முத்தம் கொடுத்து இந்த சாதனையை படைத்திருந்தனர். இந்த சாதனை மூலம் பிரபலமான இந்த தம்பதியினர் தற்போது விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காதலுக்கும், அர்ப்பணிப்புக்கும் நாங்கள் எடுத்துக்காட்டாக விளங்கினாலும், தவிர்க்க முடியாத சில […]

எந்தவகையிலான போருக்கும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு சீனா அறிவித்துள்ளது உலகம் முக்கிய செய்திகள்

எந்தவகையிலான போருக்கும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு சீனா அறிவித்துள்ளது

  • Mar 6, 2025 - 09:36 AM
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா விரும்பும் எந்தவொரு போரிலும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார். அப்போது அவர்,’ அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை […]

எலான் மஸ்க் கோரிக்கையை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ் உலகம் முக்கிய செய்திகள்

எலான் மஸ்க் கோரிக்கையை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்

  • Mar 6, 2025 - 09:26 AM
  • 0 Comments

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கின்றனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆலோசனையை நிராகரித்துள்ளார். முன்னதாக 2030-ம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அதற்கு முன்பே செயலிழக்க செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். […]

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்

  • Mar 6, 2025 - 09:17 AM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா நேற்று இரவு (05- 03-2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp