உள்ளூர் செய்திகள்

இலங்கையின் போர் குற்றவாளிகளிற்கு தடை விதித்தமையால் திருப்தியடைவதாக பிரிட்டிஸ் பிரதமர் தெரிவிப்பு

  • May 17, 2025 - 02:16 PM
  • 0 Comments

இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளமை குறித்து திருப்தியடைகின்றேன் என பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார் அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில்யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூருவதற்காக இலங்கையிலும் உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்றுதிரள்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும், நினைவுகூருவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன்,அந்த அநீதிகளின் கொடுமைகளின் பாதிப்புகள் நினைவுகளுடன் வாழும் உயிர் பிழைத்தவர்கள் அன்புக்குரியவர்களுடன் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றதனை ஏற்குமாறு பிரான்ஸ் அரசாங்கத்திடம் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை

  • May 17, 2025 - 02:11 PM
  • 0 Comments

ஆர்மேனியாவிலும், ருவண்டாவிலும் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்பதை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைப்போன்று, இலங்கையிலும் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (15-05) நடைபெற்ற தமிழர்களுக்கான பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் சி.வி.விக்கினேஸ்வரனின் காணொளி வடிவ உரை ஒளிபரப்பப்பட்டது. அந்த உரையில் அவர் மேலும் கூறியதாவது: வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் என்னால் முன்மொழியப்பட்ட ‘தமிழின அழிப்பு […]

உள்ளூர் செய்திகள்

நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வந்த கப்பலில் குஸ் போதைப்பொருள்

  • May 17, 2025 - 02:01 PM
  • 0 Comments

நேற்று (16-05) மாலை யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தில் 4 கிலோ குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், இந்தியாவில் இருந்து நாகபட்டினம் துறைமுகம் ஊடாக கப்பல் வழியாக குறித்த போதைப்பொருளை எடுத்து வந்தவேளை, சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் பொலிஸ் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் […]

உள்ளூர் செய்திகள்

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு

  • May 17, 2025 - 01:36 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனித எச்சங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனித எச்சங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் […]

உள்ளூர் செய்திகள்

பாலஸ்தீனத்தில் நடைபெறும் இனப்படுகொலையின் தீவிர ஆதரவாளர்களாகயிருப்பதா அல்லது பார்வையாளர்களாகயிருப்பதா என்பதே எம் முன்னால் உள்ள தெரிவு – கஜேந்திரகுமார் எம்பி

  • May 16, 2025 - 02:54 PM
  • 0 Comments

பாலஸ்தீனம் என்றென்றும் வாழும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,பாலஸ்தீனியர்களின் கூட்டு விருப்பம் உலகின் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிற்கு காலத்தால் அழியாத மற்றும் எல்லையற்ற உலகளாவியற்ற உலகலாவிய எடுத்துக்காட்டாக பிரகாசிக்கும் என குறிப்பிட்டுள்ளார். நக்பாவின் 77 வருடத்தை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. எங்களின் மொபைல் சாதனங்களிற்குள் 24 மணிநேரமும் ஏழு நாட்களும் நேரடிஒளிபரப்பு செய்யப்பட்ட முதலாவது இனப்படுகொலையாக விளங்குகின்ற போதிலும்,இந்த […]

உள்ளூர் செய்திகள்

வவுனியாவை சென்றடைந்தது முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி

  • May 16, 2025 - 02:36 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று வவுனியாவை வந்தடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம்திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக ஆரம்பமான குறித்த ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக வவுனியா நகரை வந்தடைந்தது. வவுனியாவில் நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து நகரவீதியூடாக தினச்சந்தையை அடைந்தது. குறித்த ஊர்தி பவனியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

உள்ளூர் செய்திகள்

இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி யாழ் சங்கானையில் வழங்கப்பட்டது

  • May 16, 2025 - 02:27 PM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. இந் நிகழ்வில், முன்னாள் போராளியான ஜெயசீலன் என்பவர் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார். அதன்பின்னர் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜெயந்தன், கந்தையா இலங்கேஸ்வரன், ஜெசிந்தன், ஆதவன் […]

உள்ளூர் செய்திகள்

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் தொழில்சங்க நடவடிக்கையை அடக்க அரச நிர்வாகம் நடவடிக்கை

  • May 16, 2025 - 02:16 PM
  • 0 Comments

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டத்தை பொலிஸாரைக் கொண்டு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று அடக்குவதற்கு உப்பள நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது என போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டுசென்று பொதி செய்யும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பளத்தின் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், உப்பளத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாடசாலை காதல் பிரச்சினையால் மாணவனுக்கு கழுத்தறுப்பு- திருகோணமலையில் சம்பவம்

  • May 15, 2025 - 04:54 PM
  • 0 Comments

திருமலை புல்மோட்டையில் மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் : கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஒரு மாணவர் வைத்தியசாலையில் அனுமதி திருகோணமலை, புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையே இன்று காலை பாடசாலையில் வைத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு மாணவர் இன்னுமொரு மாணவர் மீது கூரிய ஆயுதத்தைக் கொண்டு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை குரல்கொடுப்பேன்- உமாகுமரன்

  • May 15, 2025 - 04:16 PM
  • 0 Comments

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன்.என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த மக்கள்; இனப்படுகொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் எப்படி 2009ம் ஆண்டு லண்டனை ஸ்தம்பிக்க செய்தனர் என்பதை அவர் நினைவுகூர்ந்துள்ளார். இந்த வருடம் இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்ததன் மூலம் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp