உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவு விபத்தில் 8 வயதுடைய பாடசாலை மாணவி பலி

  • May 21, 2025 - 01:10 PM
  • 0 Comments

முல்லைத்தீவு, கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று காலை 7 மணியளவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த பணிஷ் வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிவிட்டு திரும்பி சென்றபோது கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டாரக வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சீரியல்கள் போல அண்ணனும் தம்பியும் மாறி மாறி தமக்கிடையே வெட்டி விளையாடுகின்றனர்

  • May 21, 2025 - 07:12 AM
  • 0 Comments

பதுளை நகர மத்தியில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் நேற்று மாலை (20-05) இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில், மூத்த சகோதரர், இளைய சககோதரை அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில், காயமடைந்த இளைய சககோதரரின் உயிர், அறுவை சிகிச்சை நிபுணரின் திறமையால் காப்பாற்றப்பட்டதாக பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் முகநூலில் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,”இளைய சககோதரர் ஏற்கனவே மூத்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அபுதாபியில் உருவாகின்றது உலகின் முதல் ஏ.ஐ நகரம். அனைத்து கைவிரலில்

  • May 21, 2025 - 07:03 AM
  • 0 Comments

உலகின் முதல் யுஐ நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் தொழில்நுட்பம் மூலம் நகர்ப்புற வாழ்க்கையை மறுவரையறை செய்யும் குறிக்கோளுடன் இந்த நகரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் இல்லாத போக்குவரத்து அமைப்புகள், ஸ்மார்ட் வீடுகள், சுகாதாரம், கல்வி மற்றும் எரிசக்தி என அனைத்திற்கும் இந்த நகரம் ஏ.ஐ. அடிப்படையிலான தீர்வுகளைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. செயற்கை […]

உள்ளூர் செய்திகள்

காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கலை தடுக்குமாறு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய, சுவிட்ஸர்லாந்து நாடுகளிடம் பேரவை வேண்டுகோள்

  • May 21, 2025 - 06:54 AM
  • 0 Comments

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டியில் விகாரை நிர்மாணம் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்பு முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டு இராஜதந்திரகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், காணி அபகரிப்பையும், தொல்பொருள் அடையாளங்கள் பௌத்தமயப்படுத்தப்படுவதையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில் […]

உள்ளூர் செய்திகள்

அரசின் காணி அபகரிப்பு தற்காலிக இடைநிறுத்தம் தீர்வை தராதென்கிறார் சட்டத்தரணி சுமந்திரன்

  • May 21, 2025 - 06:45 AM
  • 0 Comments

வட மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எனவே அவ்வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்படவேண்டும் என மீளவலியுறுத்தியுள்ளார். காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை […]

உள்ளூர் செய்திகள்

வடக்கு காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு உடன் மீளப் பெறவேண்டுமென ; கஜேந்திரகுமார் பிரேரணை சமர்ப்பித்துள்ளார்

  • May 20, 2025 - 04:47 PM
  • 0 Comments

வடக்கிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்குப் பிரேரணையொன்றை அனுப்பிவைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை அரசு கையகப்படுத்துதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 28.03.2025 திகதி இடப்பட்ட, 2430ஃ2025 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள 5000 ஏக்கருக்கும் […]

உள்ளூர் செய்திகள்

வவுனியா சிறையில் சிறை காலர்கள் யாழ்ப்பாண கைதி மீது கொலைவெறி தாக்குதல்

  • May 20, 2025 - 02:44 PM
  • 0 Comments

வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது சிறைக்காவலர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக கைதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சிறைக்காவலர்களின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த சிவபாலன் லக்சன் என தெரியவருகிறது. படுகாயமடைந்த சிறைக்கைதி வவுனியா பொது வைத்தியசாலையின்; அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 15-05-2025 தொடக்கம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறைக்கைதியின் உறவினர்களால் நேற்று (19-05) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக […]

உள்ளூர் செய்திகள்

புலம் பெயர் தமிழ் மக்களுக்கு அரச தரப்பில் ஆதரவு வழங்குவதாக சரத் வீரசேகர குற்றச்சாட்டு

  • May 20, 2025 - 02:30 PM
  • 0 Comments

”யுத்தக் குற்றம் செய்துள்ளோமென்ற குற்றச் சாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கருத்துகளை முன்வைத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாட்டைக் காட்டிக்கொடுத்து வருகிறார். தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தக் குற்றம் இடம்பெறவில்லையென்பதை நிபுணர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பிமலின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் டயஸ்போராவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அவரின் கருத்துகள் அமைந்துள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று (19-05) இடம்பெற்ற செய்தியாளர் […]

உள்ளூர் செய்திகள்

மஹிந்த, குடும்பம் மரணித்த படையினருக்கு அஞ்சலி செலுத்தினர்

  • May 20, 2025 - 02:12 PM
  • 0 Comments

முப்பது வருடகால யுத்தத்தில் உயிரிழந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் பாராளுமன்ற மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள போர்வீரர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ‘இன்று நாங்கள் […]

உள்ளூர் செய்திகள்

கர்ப்பமான மனைவியையும் வயிற்றிலுள்ள சிசுவையும் தூக்கில் தொங்கவிட்ட கொன்ற கணவன்- மாத்தறையில் சம்பவம்

  • May 19, 2025 - 07:26 PM
  • 0 Comments

மாத்தறை தெனியாய என்சல்வத்த கொஸ்குளுன தோட்டத்தின் நேற்று இரவு பெண்ணொருவர் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 06.45 மணியளவில் மணைவி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக கணவன் வீட்டு வாசலுக்கு அருகில் வந்து கத்தியுள்ளார். உடனே ஊராருக்கு சந்தேகம் ஏற்படவே கணவன் மாயமாக சென்று பொலிஸ் நிலையத்தில் ஆஜர் ஆகியுள்ளார். ஊரார் உடனே 1990 அம்பியுலன்ஷ் மற்றும் தெனியாய பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். குறித்தப்பெண் இறந்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில் இந்த பெண் 9 மாதங்கள் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp