கட்டுநாயக்கவில் பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்..!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதன் காரணமாகவே இந்த விமானம் இவ்வாறு அவசரத் தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. யு.எல். 606 (UL 606) ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் ஒரு எஞ்சின் மீது மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், ஒரு பாதுகாப்புப் படியாக விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]









