தீவகத்தில் மாடுகளை திருடிய குற்றத்தில் 07 பேர் கைது..!
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து 2300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். வேலணை , புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் பண்ணையாளர்களின் மாடுகள் களவாடப்பட்டு , சட்டவிரோதமாக இறைச்சியாக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்திருந்தது. அதேவேளை வீடுகளை உடைத்து நகைகள் மற்றும் பணம் […]









