மாகாண சபைகளுக்கான தேர்தல் மக்களுக்கா? அரசியல்வாதிகளுக்கா?
வடக்கு கிழக்குக்காக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் புகுத்தப்பட்ட மாகாண சபை முறைமை இலங்கை அரசால் மட்டுமன்றி இந்தியாவாலும்கூட வேண்டப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. ஆனால், மாகாண சபைத் தேர்தலை தமிழ்த் தேசிய கட்சிகள் முக்கியமாக தமிழரசுக் கட்சி நாளும் பொழுதும் வேண்டி வருகிறது. இதற்காக தாயகத் தமிழ் மக்களை இணைத்து வெகுஜனப் போராட்டம் ஒன்றை நடத்தும் வலிமை இவர்களிடம் உள்ளதா? இதற்கு விடை காணப்படாதவரை மாகாண சபைத் தேர்தல் மக்களுக்கானதா அல்லது அரசியல்வாதிகளுக்கானதா என்ற கேள்வி தொடர்ந்தவாறே இருக்கும். ஊழல் […]









