வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன்வளர்ப்பு செயற்திட்டம்..!
மட்டக்களப்பு வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வேர்ள்ட்விஷன் நிறுவனத்தின் மீன்மதி செயற்திட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பின் தொழில்நுட்ப நிபுணர் குணநேசராஜா பிரதீஷ் தெரிவித்தார். வாகரையில் உள்ள கிரிமிச்சைக் குளத்தில் ஒரு தொகுதி மீன் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு அங்குள்ள உள்ளுர் மீனவ சங்கங்கள், பயனாளிகளான பெண்கள் உட்பட கிராம மீனவர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. நிலைபேறான, காலநிலைக்கு இசைவான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மூலம் பிரதேச […]









