திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி..!
சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நேற்று (07.05.2026) மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் வரவேற்கத்தக்கவை எனவும், இவ்வாறான வாய்ப்புகள் அடிக்கடி கிடைப்பதில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், […]









