கரடியனாறு பிரதேசத்தில் நடைபெற்ற மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வும், அறநெறிக்கல்வி விழிப்புணர்வு ஆன்மீக எழுச்சி ஊர்வலமும்..!
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசனை, வழிகாட்டலுக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டர் திருக்கூட்டத்தின் ஏற்பாட்டில் கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயம், சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை ஆகியன இணைந்து நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வும், ஆன்மீக எழுச்சி ஊர்வலமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) கரடியனாறு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவுருவப் படம் தாங்கிய ஆன்மீக எழுச்சி ஊர்வலம் கரடியனாறு நரசிங்கவைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, ஊரைச் சுற்றி சித்திவிநாயகர் ஆலயத்தை […]









