உள்ளூர் முக்கிய செய்திகள்

முகமாலையில் வர்த்தக நிலையமொன்றின் மீது 3வது தடவையாகவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

  • Feb 20, 2025 - 04:23 PM
  • 0 Comments

முகமாலை வடக்கு ஏ9 வீதியோரத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் நேற்று (19-02-2025) நள்ளிரவு 12.30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த கடை மீது 2020ஆண்டில் கழிவு எண்ணெய் வீசப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இரும்புக்கம்பியை பயன்படுத்தி கடையின் சொத்துக்களை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், மீண்டும் அதே கடை மீது நேற்றைய தினம் மூன்றாவது தடவையாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் வன்முறை கும்பலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்

  • Feb 20, 2025 - 04:11 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் இருந்த வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபரான விசுவாசம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பூநகரி மத்திய கல்லூரி அதிபரும் , முன்னாள் அதிபரும் கடந்த சனிக்கிழமை (15-02-2025) பூநகரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை தனங்களப்பு பகுதியில் நிறை போதையில் நின்ற வன்முறை கும்பல் அதிபர்கள் இருவரையும் வழிமறித்து மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஓய்வு பெற்ற அதிபர் சிகிச்சை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் தொடர் போராட்டம் 8 ஆண்டுகளை எட்டியுள்ளது

  • Feb 20, 2025 - 03:57 PM
  • 0 Comments

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று தீச்சட்டி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் இருந்து ஏ9 வீதி வழியாக டிப்போ சந்தி வரை சென்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோசங்களை எழுப்பினர்.   […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கொலையாளிக்கு உதவிய பெண்ணை கைது செய்ய பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

  • Feb 20, 2025 - 12:09 PM
  • 0 Comments

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று (19-02-2025) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கொலையாளி தப்ப உதவிய சாரதி கைது

  • Feb 20, 2025 - 11:36 AM
  • 0 Comments

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று (19-02-2025) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு தப்பிச் செல்ல உதவி செய்ததாக கூறப்படும் வேன் சாரதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான வேன் சாரதி புத்தளம் பாலாவி பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளாhர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் விடயங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாதென்கிறார் ஜெகதீஸ்வரன் எம்பி

  • Feb 20, 2025 - 10:51 AM
  • 0 Comments

மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல், பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய கனிய மணல் அகழ்வுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இது மக்களுக்கான அரசாங்கம். எனவே, மன்னார் மக்கள் கிலேசம் அடையத் தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். மன்னாரில் நேற்று (19-02-2025) கனிய மணல் ஆய்வினை மேற்கொள்ள கள விஜயம் செய்த குழுவினர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மன்னார் மாவட்டத்தில் கனிய மணல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இன்ரர்போலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இருவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்

  • Feb 20, 2025 - 10:40 AM
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்தியாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகயிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று கொண்டுவரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலை, துப்பாக்கிச் சூடு மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ‘இரத்நாயக்க வீரகோன் அரோஸன் மதுஸங்க’ என்பவரும் மொரட்டுவை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னார் கடல் பரப்புக்குள் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • Feb 20, 2025 - 10:28 AM
  • 0 Comments

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . குறித்த மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

உள்ளூர் கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள் வணிகம்

அநுரவின் 2025 பாதீடானது ஒப்பீட்டளவில் சிறந்ததே

  • Feb 20, 2025 - 10:00 AM
  • 0 Comments

நிதியமைச்சர் அமரர் ரொனி டிமெல் சமர்பித்த பாதீட்டு அறிக்கையின் பின் அநுரவின் 2025 பாதீட்டு அறிக்கை சிறந்ததெனலாம். பின்னணி முன்னாள் நிதி அமைச்சர் அமரர் ரொனி டிமெல், இலங்கையின் பொருளாதார மற்றும் நிதி நடவடிக்கைகளில் மிக முக்கியமான பாத்திரம் வகித்தவர். 1970 மற்றும் 1980 களில், அவர் வழிநடத்திய வரவு செலவு திட்டங்கள் இலங்கையின் பொருளாதார நிலைமையை தழுவி, மக்களுக்கு அடிப்படை நலன்கள் மற்றும் சேவைகளை வழங்க வழிகாட்டியது. அவர் நிதி கொள்கைகள் ஊழல் மற்றும் நிர்வாகக் […]

இந்தியா உலகம் கனடா செய்திகள் முக்கிய செய்திகள்

கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம் எங்கேயென இந்தியாவில் விசாரணை

  • Feb 20, 2025 - 07:22 AM
  • 0 Comments

திரைப்பட பாணியில் கனடா விமான நிலையத்தில் 6,600 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்தியா விசாரணயைத் துவக்கியுள்ளது. 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது ‘பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அந்த பார்சல்களில் 6,600 தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. அவற்றின் எடை சுமார் 400 கிலோகிராம். கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp