உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள்..!

  • May 19, 2026 - 09:42 AM
  • 0 Comments

தமிழின வரலாற்றின் மிகக் கொடூரமான இனஅழிப்பான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு நாள், மே 18, 2026 திங்கட்கிழமை பல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களால் லண்டனில் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வு பிற்பகல் 3.00 மணிக்கு லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகி, இலக்கம் 10 பிரதமர் வாசஸ்தலத்தை நோக்கி கவனயீர்ப்பு பேரணியாக இடம்பெற்றது. இந்நிகழ்வை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா (TCC-UK) மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கிய இராச்சியம் இணைந்து ஏற்பாடு […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 19, 2026 - 09:27 AM
  • 0 Comments

19.05.2026 நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் […]

புதியவை உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் பள்ளிவாசல் ஒன்றில் துப்பாக்கிச் சூடு..!

  • May 19, 2026 - 09:22 AM
  • 0 Comments

அமெரிக்காவின் சென்டியாகோவிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் அந்நாட்டு நேரப்படி நேற்று (18.05.2026) இரவு 11.53 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகநபர்களில் ஒருவர் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி துவிச்சக்கரவண்டியில் சென்ற மாணவன் உயிரிழப்பு..!

  • May 19, 2026 - 09:07 AM
  • 0 Comments

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவன் ஒருவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரந்தன் பகுதியில் மாணவன் ஒருவர் தனது துவிச்சக்கரவண்டியில் (வழமையான பாதையில்) பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து துவிச்சக்கரவண்டி மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்குள்ளான […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கண்ணீரில் மூழ்கியது முள்ளிவாய்க்கால்..!

  • May 18, 2026 - 02:24 PM
  • 0 Comments

இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை(18.05.2026) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பங்கேற்ற மக்கள் தமது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.  

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொன்.சிவகுமாரின் சிலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

  • May 18, 2026 - 02:13 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பொன். சிவகுமாரின் சிலைக்கு மாலை அணிவித்து முள்ளிவாய்க்கால் நினைவாக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களில் 100 பேருக்கு அரிசிப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விமல்வீரவங்சவின் வழக்கு ஒத்திவைப்பு..!

  • May 18, 2026 - 01:42 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18.05.2026) உத்தரவிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்..!

  • May 18, 2026 - 12:36 PM
  • 0 Comments

தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (18.05.2026) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் […]

புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

17 வருடங்கள் கடந்தும் ஈழத்தமிழர்களுக்கு நீதிக்கிடைக்கவில்லை..! நிழல்கள் ரவி

  • May 18, 2026 - 12:21 PM
  • 0 Comments

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையின அரசின் அடக்குமுறையை எதிர்த்து சிறுபான்மையின மக்களான தமிழ் மக்கள், 30 ஆண்டுகளாக உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினர். கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் அந்த யுத்தமானது […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் பிரார்த்தனை..!

  • May 18, 2026 - 11:39 AM
  • 0 Comments

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்றைய தினம்(18.05.2026) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. இதில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.