யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 80 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
மாதகல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சில்லாலையை சேர்ந்த நபரும் , சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?

