புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக முதல்வருக்கு யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் கோரிக்கை..!

  • May 20, 2026 - 11:06 AM
  • 0 Comments

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார். யாழில் உள்ள கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவர்களுக்கு யாழ் மாவட்ட […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்..!

  • May 20, 2026 - 11:02 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகர ஆணையாளரான கடமையாற்றிய எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மல்யுத்த போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் சாதனை..!

  • May 20, 2026 - 10:58 AM
  • 0 Comments

மல்யுத்தம் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் 16 வயது கீழ் பிரிவு ஆண்கள் ம.ருபிஷன் மற்றும் லி.வசீகரன் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும் பா.அசோக்குமார் வெள்ளிப் பதக்கத்தையும் மற்றும் 18 வயது கீழ் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது..!

  • May 20, 2026 - 10:53 AM
  • 0 Comments

கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை (19.05.2026) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சீனர்கள் 3 கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!

  • May 20, 2026 - 10:42 AM
  • 0 Comments

சைபர் குற்றங்களை (இணையவழி குற்றங்கள்) புரிவதற்காக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 5,140,000 ரூபாய் பெறுமதியான கைபேசிகள் மற்றும் அவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் சுங்கத்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. குறித்த கைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து, பசுமை வழித்தடம் ஊடாக வெளியேற்ற முயன்ற போதே இந்த மூன்று சீன நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 20, 2026 - 10:36 AM
  • 0 Comments

20.05.2026 நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வாழைச்சேனையில் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தும் நிகழ்வு..!

  • May 19, 2026 - 11:17 AM
  • 0 Comments

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தை முன்னிட்டு, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை (18.05.2026) கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ், “முழு நாடும் ஒன்றாக” எனும் தொனிப்பொருளில், விஷப்பொருள் தடுப்பு தேசிய செயற்பாட்டு சபையின் வழிநடத்தலில் நாடளாவிய ரீதியில் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திட்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கை டிஜிட்டல் அமைப்புகள் தொடக்கிவைப்பு..!

  • May 19, 2026 - 11:11 AM
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் (NDRSC), நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியுடனும், யுனிசெப் இலங்கை மற்றும் ஐ.நா. தன்னார்வலர்களின் ஆதரவுடனும், தனது புதிய டிஜிட்டல் இழப்பீட்டு முகாமைத்துவ அமைப்பு மற்றும் சமூக விசாரணைப் பொறிமுறையை நேற்றைய தினம் (18.05.2026) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. திட்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேகமான, மேலும் வெளிப்படையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஆதரவை உறுதி செய்வதில் இது ஒரு முக்கிய […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிறிய, நடுத்தர உற்பத்திகளை மேம்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வு..!

  • May 19, 2026 - 11:05 AM
  • 0 Comments

காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் ஆளுமை விருத்தி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் நேற்று (18.05.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டது. காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் , சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி எஸ்.எப்.ஆர். பரீட், கருத்திட்ட முகாமையாளர் திருமதி கண்ணன், சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான எஸ்.எச்.எம்.முஸம்மில், ஏ.எம்.சுல்மி ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் […]

உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

ஸ்காட்லாந்தில் இடம்பெற்ற அமைதி நடைப்பேரணி..!

  • May 19, 2026 - 10:00 AM
  • 0 Comments

மே 18 தமிழின அழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடுமைகளை நினைவுகூரும் முகமாக ஸ்காட்லாந்தில் நேற்றைய தினம்(18.05.2026) அமைதி நடைப்பேரணி இடம்பெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முதன் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி, கலை மற்றும் கலாச்சார அமைச்சராகிய திருமதி டாக்டர் துஷான்லி உபேந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. எமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள், தமிழ் பற்றாளர்கள், தமிழ் மக்கள் […]