வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம்..??
வலி வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதாக, காணி விடுவிப்பு தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் […]









