உலக சந்தையில் மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை..!
ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.75 சதவீதம் அதிகரித்து 97.8 டொலராகப் பதிவாகியுள்ளது. அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகி வந்த வேளையில், […]









