தீவக மீனவ சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்..!
எல்லை மீறிய இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து இன்றைய தினம் குறித்த போராட்டம் இடம்பெற்றது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1786076089478309
எல்லை மீறிய இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து இன்றைய தினம் குறித்த போராட்டம் இடம்பெற்றது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1786076089478309
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவப் பெருவிழாவின் மஞ்ச திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது. கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா நேற்று(28.07.2026) நடைபெற்றது. எதிர்வரும் 11ஆம் திகதி தேர்த் திருவிழாவும், மறுநாள் ஆடி அமாவாசை தினமான 12ஆம் திகதி கீரிமலை புனித கடற்கரையில் தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த இளைஞன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் வராத நிலையில் , வீட்டார் சென்று பார்த்த போது மலசல கூடத்திற்குள் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். அதனை அடுத்து , அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் […]
கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (28.07.2026) இரவு இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பில் கம்பளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். பின்னர் காயமடைந்த நபர் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார். உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் […]
கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீப்பள்ளயச் சடங்கு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. மகாபாரதக் காவிய நாயகியும், அக்னியில் அவதரித்த பாஞ்சாலி தாயின் அருளாசி வேண்டி ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும் இச்சடங்கு உற்சவம், கடந்த வெள்ளிக்கிழமை (24.07.2026) ஆம் திகதி இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. இதன் தொடர்ச்சியாக, இன்று புதன்கிழமை (29.07.2026)காலை ஆலயத்தில் விசேட […]
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், டெங்கு நோய் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17,779 ஆகும். இரண்டாவது அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 16,665 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அதிகளவான […]
காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார். டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (28) பிற்பகல் கொழும்பிலுள்ள SEMA கட்டிட கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றதுடன், அங்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனை குறிப்பிட்டார். அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசு […]
வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும் அபாயம் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் , கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியில் , கடந்த காலங்களில் சுண்ணக்கற்கள் அகழப்பட்டு பாரிய குழிகள் காணப்படுகின்றன அவை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய கால […]