உள்ளூர்

வவுனியாவில் மனைவியின் தாயின் வாயில் வெடி வைத்தார் மருமகன்

  • Nov 5, 2024 - 09:09 PM
  • 0 Comments

  வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இடியன் துவக்கு என அழைக்கப்படும் நாட்டு துப்பாக்கியுடன் மாமியின் வீட்டிற்கு சென்ற மருமகன் மாமியில் வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளாhர். படுகாயமடைந்த 54 வயதுடைய பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாhர் சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்  

செய்திகள்

லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கம்பி எண்ணுகிறார்.

  • Nov 4, 2024 - 01:15 PM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்த அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவுடுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் நிலையத்தில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது கைது […]

செய்திகள்

கடனும் வாங்கவில்லை காசும் அடிக்கவில்லை- விஜித ஹேரத்

  • Oct 29, 2024 - 01:37 PM
  • 0 Comments

    சமூக ஊடகங்களில் அரசு கடன் பெற்றதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன் புதிய நாணயத்தாள்களையும் அச்சிடவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரைவ பேச்சாளர் விஜித ஹேஇதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூர்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டம்.

  • Oct 28, 2024 - 01:40 AM
  • 0 Comments

இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் […]

செய்திகள்

சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  • Oct 26, 2024 - 05:01 PM
  • 0 Comments

.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உலகம்

அமெரிக்காவில் வானொலி கோபுரத்துடன் ஹெலிகொப்டர் மோதி விபத்து 4 பேர் பலி.

  • Oct 22, 2024 - 03:42 PM
  • 0 Comments

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். விபத்து நடைப்பெற்ற பகுதியில் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் […]

செய்திகள்

ரணிலிடம் 13 மஹிந்தவிடம் 15 அரச வாகனங்களாம்

  • Oct 19, 2024 - 01:04 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் பயன்படுத்தும் மேலதிக அரச வாகனங்களை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் வேணடுகோள் விடுத்துள்ளது. அரச வாகனங்களை ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போது; இதுவரை கையளிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 […]

செய்திகள்,தமிழ்செய்திகள்,யாழ்ப்பாணம்செய்திகள், உள்ளூர்

மூன்று நாட்கள் காலக்கெடு வழங்கியது அரசு உதய கம்மன்பிலவுக்கு

  • Oct 16, 2024 - 12:00 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் விசாரணைக்குழு அறிக்கைகள் மறைத்து வைத்திருப்பது குற்றம் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எனவே அவற்றை உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதியரசர்களான இமாம் மற்றும் அல்விஸ் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கைகளை புதிய அரசு 7 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உதய கம்மன்பில […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp