நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி..!
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசு, இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசு, இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அம்பாறை சேர்ந்த இந்தச் சந்தேகநபர், பிபில பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் பெண்களுடன் நட்பாகப் பழகி, பின்னர் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் Edit செய்து, அவற்றைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். […]
நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் இன்று (05.05.2026) காலை 7.00 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 13 பாடசாலை மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேனின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் இன்று 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவாகம வித்யா பூஷணம்,சிவாச்சார்ய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஷ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மகா சங்காபிஷேக கிரியைகளை நடாத்தினார்கள். ஆலய தர்மகர்த்தாக்களான இரா.திருநாவுக்கரசு கே.ஜெகமோகன் மற்றும் மா.சிதம்பரநாதன் எம்.ரவீந்திரன் உள்ளிட்ட பரிபாலன சபையினர் மற்றும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பணி நயப்பு விழா ஆலயத் தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை(01.05.2026) நடைபெற்றது. ஆலய இருப்பு மற்றும் கட்டுமான பணிகள், சமய ஆன்மீக வளர்ச்சிக்கும், பாரம்பரிய கலை கலாச்சார ஊடக சேவை மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்த எழுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். ஆலய அலங்கார உற்சவத்தை சிறப்பாக செய்த சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள்- மீனாட்சி அலங்கார பூஷணம், சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் […]
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார். உயிரிழந்த கைதி கடந்த 3ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின் துப்புரவுப் பணிகளின் போது தப்பிச் சென்றிருந்ததுடன், அதன் போது சிறைச்சாலை அதிகாரிகளால் மீண்டும் பொறுப்பேற்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் குறித்த கைதி […]
“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்திற்கு எமது முழுமையான பங்களிப்பை வழங்குவோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மலையகத் தலைமைகளின் ஒருங்கிணைப்பில் கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ”மலையகம் நீலகாமம் தோட்டத்தில் அட்டூழியக் […]
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் முல்லைத்தீவு மாவட்ட ரீதியான கலந்துரையாடலில் தங்களை அன்புடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். ஒருங்கிணைப்பாளர் : தவத்திரு வேலன் சுவாமிகள் தேதி : 06.05.2026 புதன்கிழமை நேரம் : காலை 10 மணி இடம் : முல்லைத்தீவு ஊடக அமைய கட்டிடம், PWD வீதி, முல்லைத்தீவு. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். […]
யாழ்ப்பாணம் பண்ணை தொடக்கம் மண்டைதீவு சந்தி வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் கடற்கரை பகுதி தன்னார்வலர்களினால் சிரமதானம் மூலம் நேற்றைய தினம்(04.05.2026) ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யபப்ட்டது. அதன் போது, கடற்கரைகளில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் அகற்றப்பட்டன
தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றார். நேற்று (03.05.2026) பிற்பகல் கம்பன் விழாவானது வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்றது. சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது. இங்கு கருத்துரைத்த ஜனாதிபதி இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் […]