செய்திகள்

பொதுத் தேர்தலை முன்னிட்டு 13ம், 14ம், பாடசாலைகளுக்கு விடுமுறை.

  • Nov 8, 2024 - 01:09 PM
  • 0 Comments

  அனைத்து அரச பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு இவ்வாறு தீர்மானிக்க்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மீண்டும் நவம்பர் 18ஆம் திகதி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்களிப்பு நிலையங்களுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 12.11.2024 அன்று பாடசாலை நேரத்திற்குப் பின் சம்பந்தப்பட்ட கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்கு […]

செய்திகள்

மன்னாரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மக்களையும் சோதனைக்குட்படுத்தினர்

  • Nov 4, 2024 - 03:28 PM
  • 0 Comments

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (4) காலை மன்னாருக்கு விஜயம் செய்தார். பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் கூட்டத்தில் பரப்புரை செய்யவே அங்கு சென்றார் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதன் போது ஜே.வி.பி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அடங்கலாக சுமார் 500க்கும் மேற்பட்டவர்  கலந்துகொண்டனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் […]

செய்திகள்

லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கம்பி எண்ணுகிறார்.

  • Nov 4, 2024 - 01:15 PM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்த அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவுடுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் நிலையத்தில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது கைது […]

செய்திகள்

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

  • Nov 4, 2024 - 11:18 AM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தன் மீது அவதூறு பரப்பும் வகையிலான கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (3) மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதனை அதை தான் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதாகவும் தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் கூறியதாக சால்ஸ் கவலை […]

உள்ளூர்

பட்டு வேட்டிக்கு கனவு கண்டால் கட்டியிருந்த கோவணமும் களவாடப்படும் – டக்ளஸ்

  • Nov 3, 2024 - 08:16 AM
  • 0 Comments

மக்களக்காக உழைக்கின்ற அரசியல் தலைமைகளையே மக்கள் எதிர் வரும் நாடாளுமன்ற தோதலில் தெரிவு செய்வார்கள் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிpவத்துள்ளாhர் இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட நடைமுறைச் சாத்தியமான இலக்குகளை அடைய முயற்சிப்பதே சரியான வழியென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் வடமராட்சி பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் நேற்று (02) ஈடுபட்ட போது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார் இதன்போது அவர் மேலும் கூறுகையில், சமஷ்டி என்ற […]

செய்திகள்

திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும்-ச.குகதாசன்.

  • Oct 30, 2024 - 12:33 PM
  • 0 Comments

திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே தேர்தலில் சங்குடன் இணைந்து போட்டியிடுவதாக சமஸ்டி தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலை தம்பலகாமம் பிரதேச மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு, கிழக்கில் திருகோணமலையில் மாத்திரமே தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க இலங்கை தமிழ் அரசு கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

செய்திகள்

பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்த்தரிப்பதற்கு நடவடிக்கை-வடக்கு ஆளுநர்

  • Oct 30, 2024 - 11:51 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பற்றிய கலந்துரையாடல் நேற்று (29) ஆளுநர் செயலகத்தில் நடைப்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர். விமான நிலைய உட்கட்டுமான அபிவிருத்தி, விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிகள்; தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. விமான நிலையத்தை அண்டிய பிரதேசத்தின் […]

உலகம் கனடா

பழங்குடியின சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி.

  • Oct 29, 2024 - 02:05 AM
  • 0 Comments

ஒன்றாரியோ பழங்குடியின சமூக மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த சம்பவத்திற்காக தற்பொழுது அமைச்சர் கரி ஆனந்தசங்கரி மன்னிப்பு கோரியுள்ளார் 1862 ஆம் ஆண்டு பழங்குடியின மக்களின் காணிகளை விற்பனை செய்து கிடைக்கப்பெற்ற பணத்தை அந்த மக்களுக்கு வழங்காது வேறும் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதுடன் அந்த மக்களுக்கு […]

செய்திகள்

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி தமிழ் தேசிய மக்கள் முன்னனி – கஜேந்திரகுமார்.

  • Oct 28, 2024 - 11:46 AM
  • 0 Comments

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிக்கக் கூடிய, ஒரு அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே உள்ளது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று (27) மன்னாரில் நடைப்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகின்றது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி […]

உள்ளூர்

தமிழ் மக்கள் கூட்டணியின் பிரச்சார நடவடிக்கையை கஜேந்திரக்குமார் குழப்புகின்றார் – வி.மணிவண்ணன்

  • Oct 25, 2024 - 06:43 AM
  • 0 Comments

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின்; பிரசார நடவடிக்கையை குழப்பும் நோக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூண்டுதலில் பருத்தித்துறை பொலிஸார் செயற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளாhர் பருத்தித்துறை பிரதேசத்pல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட 2; கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பருத்தித்துறை நகர பகுதியில்; வரதராஜன் பார்த்தீபன் தலைமையிலான அணியினர் தேர்தல் […]