செய்திகள்

சீரற்ற காலநிலையால் 132,110 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

  • Nov 29, 2024 - 11:46 AM
  • 0 Comments

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் நாடு முழுவதும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (28) காலை 06.00 மணியளவில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, இதுவரை 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஒருவர் காணாமல் போயுள்ள அதே வேளை 20 பேர் காயமடைந்துள்ளனர். அனர்த்தம் காரணமாக 102 வீடுகள் முழுமையாகவும், 2,096 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 45,329 குடும்பங்களைச் சேர்ந்த 115,319 பேர் தற்போது உறவினர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளனர் 12,348 […]

உள்ளூர்

விலாசம் காட்டிய வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை

  • Nov 27, 2024 - 06:36 AM
  • 0 Comments

தேர்தலில் வாக்களிக்கும் இலத்திரனியல் இயந்திரத்தை கண்டுபிடித்து வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டிக்காக 14 வயதுடைய சி.கபிலாஸ் என்ற மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார். மாணவன் தயாரித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை அதாவது வாக்கு சீட்டு […]

செய்திகள்

விசர் டாக்குத்தரின் விசர் வேலை

  • Nov 25, 2024 - 11:12 AM
  • 0 Comments

சர்ச்சைக்குரிய வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ச்சுனா இராமநாதனின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் அவருடன் கதைக்கவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அவருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

சண்டித்தனம் விடும் நாமல். அநுர அரசு மௌனம்?

  • Nov 25, 2024 - 07:23 AM
  • 0 Comments

அரசியல் களத்தில் சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் புதிய சட்டமியற்றுவதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக நாமல் இராஜபக்ஸ தெரிவித்துள்ளார் இராஜபக்ஸ குடும்பத்தினர் மீது தேசிய மக்கள் சக்தி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியே ஆட்சியை பிடித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளாhர் மஹரக பகுதியில் நேற்று (24) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர்; இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

உள்ளூர்

தமிழ் மக்கள் பேரவையின் மாதிரி வரைபை அடிப்படையாக வைத்து பேச தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • Nov 24, 2024 - 01:12 PM
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையானது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டுமென அவர் நிபந்தனை விதித்துள்ளார இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளது. புதிய அரசானது அடுத்துவரும் காலப்பகுதியில் புதிய […]

செய்திகள்

ஜனாதிபதி கொள்கைப் பிரடகன உரையை தொடங்கினார்

  • Nov 21, 2024 - 12:06 PM
  • 0 Comments

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அரசின் கொள்கை பிரகடனத்தை சபையில் சமர்ப்பிக்க தொடங்கினார் இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது. சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் நியமனங்கள் உள்ளிட்ட முதற்கட்ட சம்பிரதாயங்களை அடுத்து நாடாளுமன்றம் முற்பகல் 11.30 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர், ஜனாதிபதியின் வருகையுடன் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

உள்ளூர்

மன்னாரில் பிரசவத்தின் போது இளம் தாய் மரணம். உறவினர்கள் போராட்டம்

  • Nov 20, 2024 - 09:40 AM
  • 0 Comments

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் சேயும் மரணமடைந்துள்ளதால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற இளம் தாயே நேற்று (19) மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சிசேரியன் செய்ய வைத்தியர்கள் மறுத்ததுடன் இயற்கை முறையில் குழந்தையைப் பிரசவிக்க முயற்சி செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே இளம் பெண் மரணமடைய நேரிட்டது என உயிரிழந்த […]

உள்ளூர்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை போராடவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

  • Nov 19, 2024 - 09:32 PM
  • 0 Comments

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு நிறுத்துவதற்கான அழுத்தங்களையும இயலுமான வழிகளில் எல்லாம் போராடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய பொறிமுறைகள் உள்ள அனைத்து அரங்குகளில் அநுர தலைமையிலான அரச இயந்திரத்தை நிறுத்தக்கூடிய சாத்தியமான வழிகளில் எங்களுடைய பயணம் இன்னும் தீவிரம் அடையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார் இன்று (19) முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர்தூவி […]

உள்ளூர்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸார் உடந்தை

  • Nov 16, 2024 - 08:20 AM
  • 0 Comments

கிளிநொச்சியின் பல பிரதேசங்களில்; சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுகின்றது என கிளிநொச்சி வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் விவசாயம் செய்யும் மக்களுக்கு சொந்தமான காணிகளிலும் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் கிளிநொச்சி பொலீஸாருடன் நல்ல உறவில் இருப்பதனால் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொது மக்கள் குற்றம் […]

உள்ளூர் செய்திகள்

தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது- வி.எஸ்.சிவகரன்

  • Nov 12, 2024 - 02:10 AM
  • 0 Comments

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது எனவே அனைவரும் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் நேற்று திங்கட்கிழமை (11) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மாற்றம் ஊழலற்ற புதிய அரசியல் கலாசாரத்தை கட்டமைப்போம் இலங்கையராக ஒன்றிணைவோம் என கவர்ச்சிகரமாக பன்மைத்துவ […]