இந்தியா செய்திகள்

அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் ஓர் செய்தி!

  • Jun 27, 2025 - 10:03 PM
  • 0 Comments

எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான தமது நிலைப்பாட்டை சீனாவிடம் மீண்டும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர், சீன பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாத […]

உலகம் செய்திகள்

ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி!

  • Jun 27, 2025 - 09:37 PM
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகர் பாங்குயில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே மாணவர்கள் பள்ளியில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும், இங்குமாக ஓடினர். இதனை தொடர்ந்து பள்ளி கட்டிடம் தீப்பிடித்து மளமளவென […]

உலகம் செய்திகள்

ஜப்பானை அலறவிட்ட ‘ட்விட்டர் கொலையாளி’ – தூக்குதண்டனை நிறைவேற்றம்.

  • Jun 27, 2025 - 09:24 PM
  • 0 Comments

தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2017-ல் நடந்த இந்த கொடூர சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம், 2020-ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது. தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து வந்தார். அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் மேலும் இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!

  • Jun 27, 2025 - 08:52 PM
  • 0 Comments

யாழ் செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இரண்டாவது […]

உள்ளூர் செய்திகள்

இலங்கை ஐ.நா.வின் கைப்பொம்மையல்லவென சஜித்தின் கட்சி தெரிவிப்பு

  • Jun 27, 2025 - 07:26 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் தேவைக்கு ஏற்ப ஆட்டி வைப்பதற்கு, இலங்கை ஐ.நா.வின் கைப்பாவை அல்ல. உங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த அரசாங்கத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தால் அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். களுத்துறையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் […]

உள்ளூர் செய்திகள்

ஸ்லோவாக்கியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மோதிரத்தில் 700 வருட பழமையான இலங்கை நீலம் பதிக்கப்பட்டுள்ளது

  • Jun 27, 2025 - 07:12 PM
  • 0 Comments

ஸ்லோவாக்கியாவின் புஸ்டி ஹ்ராட் கோட்டையின் உள்ளக பகுதியில் 700 வருடங்களுக்கு முந்தைய தங்க மோதிரம் ஒன்றை தொல்லியலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த மோதிரத்தில் இலங்கையில் இருந்து வந்த நீலம் ரத்தினம் இருப்பது அறிவியல் பரிசோதனைகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு ஒரு புதையல் வேட்டையாளர் முதன்முதலில் இந்த மோதிரத்தை கண்டுபிடித்தார். பின்னர் இது 2023ஆம் ஆண்டில் தான் ஆய்வாளர்களிடம் அது அடைந்தது. இந்த மோதிரம் 18-கேரட் தங்கத்தில் உருவாக்கப்பட்டதோடு, இரு சிங்கத் தலை வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதனிடையே […]

இந்தியா செய்திகள்

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடகவுக்கு உத்தரவு

  • Jun 27, 2025 - 06:22 PM
  • 0 Comments

காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்தியா சினிமா

போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா பிணை கோரி மனு தாக்கல்

  • Jun 27, 2025 - 06:13 PM
  • 0 Comments

அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் […]

உள்ளூர் செய்திகள்

காணி அபகரிப்பு வர்த்தமானியை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

  • Jun 27, 2025 - 06:07 PM
  • 0 Comments

காணி நிர்ணய சட்டம் பிரிவு 4 இற்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ஆ. யு. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலிதற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கிடையில் குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

என்.பி.பியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கடத்தல்? நடந்தது எனன?

  • Jun 27, 2025 - 05:55 PM
  • 0 Comments

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான சபை கூட்டத்தில் இருந்த போது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும் காலி, உனவடுன கடற்கரை பகுதியில் வைத்து இன்று மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான சபை கூட்டம் இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது இந்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவர் திடீரென […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp