தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயல்வது காணி சுவீகரிப்புக்கான முதல் படியா..?
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. தையிட்டி காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். காணியினை அளவீடு செய்வதனால் , காணிக்கான வரைபடத்தினை பெற்றுக்கொள்வதனால் , […]









