சிறைக்கைதி உயிரிழப்பு: மூன்று சிறைக்காவலர்கள் கைது..!
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார். உயிரிழந்த கைதி கடந்த 3ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின் துப்புரவுப் பணிகளின் போது தப்பிச் சென்றிருந்ததுடன், அதன் போது சிறைச்சாலை அதிகாரிகளால் மீண்டும் பொறுப்பேற்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் குறித்த கைதி […]









