vellaveli mullivaikkal event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வெல்லாவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு…

  • May 15, 2026 - 05:14 PM
  • 0 Comments

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலிலே படுகொலைக்குள்ளான உறவுகளை நினைவுகூரும் முகமாக போரதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசபைப் பிரதித் தவிசாளர் கயசீலன் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் போரதீவுப் பற்றுப் பிரதேச நிருவாகிகள், உறுப்பினர்கள் […]

president visit meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு உயர்மட்ட கலந்துரையாடல்..!

  • May 15, 2026 - 04:33 PM
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில உயர் மட்ட கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (15.05.2026) இடம் பெற்றது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், உயர் அதிகாரிகள் என பலர் […]

kumudini remembrance | Pathivu News ஈழம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குமுதினிப் படுகொலை நினைவுநாள்..!

  • May 15, 2026 - 04:00 PM
  • 0 Comments

15.05.1985 யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தார்கள். நெடுந்தீவில் வாழும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கடல் கடந்து படகுகளில் யாழ் நகருக்கு வரவேண்டியதால் அவர்கள் நாளாந்தம் தமது தேவைகளை நிறைவேற்றப் படகுகளில் பிரயாணம் செய்வது தவிர்க்க முடியாத விடயமாக அமைந்தது. நெடுந்தீவு மக்களின் கடற் போக்குவரத்திற்கு […]

hatton dickoya meeting postponed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஹட்டன் டிக்கோயா நகர சபை கூட்டம்..!

  • May 15, 2026 - 01:45 PM
  • 0 Comments

மாதாந்த சபை அமர்வு அறிக்கையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமை காரணமாக, தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் மாதாந்தக் கூட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்க அதன் தலைவர் அசோக கருணாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் தலைவரின் தலைமையில் நேற்று (14) சபை கூடியதையடுத்து, கடந்த மாதாந்தக் கூட்டத்தின் அறிக்கை சபை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில், அதன் உப தலைவர் உட்பட நகர சபை உறுப்பினர்களான […]

provincial election this year | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த !தயார்..

  • May 15, 2026 - 01:40 PM
  • 0 Comments

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (15.05.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அரசாங்கம் அதில் எவ்வித […]

sanath nishantha brother sentenced | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குற்றவாளியாகக் காணப்பட்ட சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை..!

  • May 15, 2026 - 01:33 PM
  • 0 Comments

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிலாபம் மேல் நீதிமன்றத்தினால் இன்று (15.05.2026) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக “எமது” செய்தியாளர் தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக, தாக்குதலுக்குள்ளான பிரதேச செயலாளருக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த 10 இலட்சம் ரூபாயைச் செலுத்தத் தவறினால், மேலும் 24 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க […]

no land police powers transfer | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தரவே முடியாது – பெரமுனா திட்டவட்டம்..!

  • May 15, 2026 - 01:09 PM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப் பகிர்விலேயே எமக்கு உடன்பாடு உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு […]

ampara fuel queue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறையில் மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பம்..!

  • May 15, 2026 - 12:50 PM
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் மாலை முதல் காலை வரை நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது. சில பகுதிகளில் நேற்று இரவு (14.05.2026) மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு நீண்ட வரிசைகள் காணப்பட்டன. தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் […]

imf price conditions update | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மின்சாரம், எரிபொருள் விலையில் நிபந்தனை நிறைவேற்றம் ; IMF வெளியிட்ட முக்கிய தகவல்..!

  • May 15, 2026 - 12:26 PM
  • 0 Comments

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜுலி கோசாக் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதை உறுதிப்படுத்தினார். எனினும், நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னர் இலங்கை […]

visa overstay arrests sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விசா இன்றி தங்கியிருந்த 17 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது..!

  • May 15, 2026 - 12:21 PM
  • 0 Comments

நாட்டில் இரு வேறு இடங்களில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, இலங்கையில் முறையான விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 17 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (14.05.2026) பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது 14 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 56 வயதுக்குட்பட்ட 12 சீனப் பிரஜைகள் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp