ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில உயர் மட்ட கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (15.05.2026) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


