உலக சுற்றுச்சூழல் தினம் இன்றாகும்..!
1972-ஆம் ஆண்டு முதல், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, சமகால சுற்றுச்சூழல் கருப்பொருளின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உலகளாவிய ரீதியில் எழும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து உலகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இந்நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் என்ற சமகால மற்றும் மிக முக்கியமான உலகளாவிய கருப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. […]









