கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை..! ஐ.நா வலியுறுத்தல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் குறித்து, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-எண்ட்ரே பிராஞ்ச் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் துயரச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. சிறை அதிகாரிகள் அரசுக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்வதில் சவாலான மற்றும் கடினமான கடமைகளை மேற்கொள்கின்றனர் எனச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, அவர்களின் இழப்பு ஆழமாக உணரப்படுவதாகவும் […]









