thaiyiddy vihara | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயல்வது காணி சுவீகரிப்புக்கான முதல் படியா..?

  • Apr 16, 2026 - 10:33 AM
  • 0 Comments

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. தையிட்டி காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். காணியினை அளவீடு செய்வதனால் , காணிக்கான வரைபடத்தினை பெற்றுக்கொள்வதனால் , […]

kilinochchi drugs | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!

  • Apr 16, 2026 - 10:23 AM
  • 0 Comments

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்நகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நேற்று (15.04.2026) மாலை சுமார் 4.00 மணியளவில், கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அம்பல்நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை சோதனையிட்டதில் அவரிடமிருந்து ‘ஐஸ்’ (Crystal Meth) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள்: கைது செய்யப்பட்ட […]

women kidnapping | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

  • Apr 16, 2026 - 10:17 AM
  • 0 Comments

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கில் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை […]

rayu football | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமரர் ராயூ உதைபந்தாட்ட நினைவுக் கிண்ணம் ஆரம்பமானது..!

  • Apr 16, 2026 - 10:11 AM
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் நடாத்தும் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அமரர் ராயூ நினைவுக் கிண்ண உதைபந்தாட்ட தொடர் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது நேற்றைய தினம்(15.04.2026) மாலை 04.30 மணியளவில் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் தலைவர் நகுலேஸ்வரன் தலைமையில் வத்திராயன் உதயசூரியன் மைதானத்தில் ஆரம்பமானது. மறைந்த அமரர் ராயூ அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையை அவரது தாயார் அணிவித்துவைக்க மலரஞ்சலியை வத்திராயன் கிராம சேவையாளர் ஆரம்பித்துவைத்தார் அதன்பின்பு விளையாட்டுக் கழக தலைவர்கள்,லீக் உறுப்பினர்கள்,விளையாட்டு […]

sl weather 18 6 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 16, 2026 - 09:36 AM
  • 0 Comments

16.04.2026 மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேபோல், மேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் […]

economic recovery | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம்..!

  • Apr 16, 2026 - 09:26 AM
  • 0 Comments

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது தாயகத்தில் உள்ள மக்களையே பாதிக்கும் எனவும் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பினுடைய ஸ்தாபகர் விஜயரத்தினம் தனுஸ் தெரிவித்துள்ளார். இலக்கியா-தென்றல் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி ஜெயச்சித்திரா அண்மையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பானது […]

tamil arasu party | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு..!

  • Apr 15, 2026 - 04:31 PM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (14.04.2026) யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார். நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உடுவில் பிரதேசசபை உறுப்பினர் தி.பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், ச.சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், […]

mannar red cross | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னாில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினை கண்டித்து போராட்டம்..!

  • Apr 15, 2026 - 04:26 PM
  • 0 Comments

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் இன்று (15) காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து தன்னார்வ பணியாளர்களாக 50 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேவையாற்றி வந்துள்ளனர். இதுவரை காலமும் செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளையின் அங்கத்தவர்களாக தம்மை இணைத்துக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்து வந்த போதிலும் எந்தவொரு நிர்வாகமும் தங்களுடைய […]

sri lanka rescue | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையால் மீட்கப்பட்ட ஈரானியக் கடற்படையினர் தாயகம் திரும்பினர்..!

  • Apr 15, 2026 - 04:20 PM
  • 0 Comments

இலங்கையால் மீட்கப்பட்ட இரண்டு போர்க்கப்பல்களில் இருந்த 200க்கும் மேற்பட்ட ஈரானியக் கடற்படையினர் தாயகம் திரும்பியுள்ளனர் என இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர ராய்ட்டர்ஸ் மற்றும் ஏஎஃப்பி செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்தார். மார்ச் 4 அன்று இந்தியப் பெருங்கடலில் இருந்தபோது, ​​ஐரிஸ் தேனா நீர்மூழ்கிக் கப்பல் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் தேனாவில் இருந்த 104 கடற்படையினர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த நேரத்தில், ஈரானியக் கப்பல்கள் இந்தியா ஏற்பாடு செய்திருந்த கடற்படைப் […]

goat herding | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

முகமாலையில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு..!

  • Apr 15, 2026 - 04:15 PM
  • 0 Comments

பளை பொலிஸார் விசாரணை கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று (15.04.2026) ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த விபரங்கள்: முகமாலை, பொந்தர் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை வழமை போல ஆடு மேய்ப்பதற்காகச் சென்ற முதியவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. அடையாளம் காணப்பட்டவர்: […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp